Skip to main content

உலகளவில் கரோனா பாதிப்பு 7 லட்சத்தைத் தாண்டியது!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,21,412 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,51,004 பேர் குணமடைந்துள்ளனர்.

world wide coronavirus 7 laks above peoples

உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,956 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 

ஒரே நாளில் கரோனாவுக்கு 756 பேர் இறந்ததால் இத்தாலியில் உயிரிழப்பு 10,779 ஆக அதிகரித்துள்ளது. இந்த நாட்டில் ஒரே நாளில் 5,217 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிப்பு 97,689 ஆக உயர்ந்துள்ளது. 

சீனாவில் 81,439, ஸ்பெயினில் 80,110, ஜெர்மனியில் 62,095, பிரான்சில் 40,174, ஈரானில் 38,309, பிரிட்டனில் 19,522, சிங்கப்பூரில் 844, பாகிஸ்தானில் 1,597, இலங்கையில் 117 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் ஸ்பெயினில் ஒரே நாளில் கரோனாவுக்கு 821 பேர் இறந்ததால் உயிரிழப்பு 6,803 ஆக அதிகரித்துள்ளது. 

அமெரிக்காவில் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,475 ஆக உயர்ந்துள்ளது. இந்த நாட்டில் கரோனாவுக்கு ஒரே நாளில் 255 பேர் இறந்தனர். மேலும் ஒரே நாளில் புதிதாக 18,276 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிப்பு 1,41,854 ஆக உயர்ந்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதல் முறிவை தாங்காத காதலன்; மாணவியை கொன்று ஏரியில் வீசிய வெறிச்செயல்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

the boyfriend who lost his ex-girlfriend and dumped her on the lake shore in italy

 

இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் ஹுலியா சியோஷெத்தின் (22). இவர் வினிடோ மாகாணத்தில் உள்ள பட்ஹா பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், பிலிப்போ டுரிடோ (22) என்ற இளைஞருக்கும் நட்பு ஏற்பட்டது. இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறி காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹூலியாவும், பிலிப்போவும் பிரிந்தனர். 

 

இந்த நிலையில், ஹூலியா படித்து வந்த பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவிருந்தது. இந்த விழாவில் பங்கேற்க புதிய உடை வாங்க ஹூலியா, கடந்த 16ஆம் தேதி வணிக வளாகத்திற்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறி, வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய ஹூலியா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதில், பதட்டமடைந்த அவரது பெற்றோர் இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், இத்தாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

அந்த விசாரணையில், ஹூலியா வீட்டின் வெளியே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஹூலியா வீட்டின் அருகே அவரது முன்னாள் காதலர் பிலிப்போவின் கார் வந்துள்ளது. அதன் பின், பிலிப்போ ஹூலியாவை கொடூரமாக தாக்கி அவரது காரில் வைத்து கடத்திச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, பிலிப்போவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நீண்ட தேடலுக்கு பின்பு பிலிப்போவை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். 

 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், தன்னுடனான காதலை ஹூலியா முறித்ததால், ஆத்திரமடைந்த பிலிப்போ ஹூலியாவை ஆள் நடமாட்டமில்லாத ஏரிக்கரைக்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு ஹூலியாவை கொடூரமாக தாக்கி, கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். அதன் பின்னர், ஹூலியாவின் உடலை அந்த ஏரிக்கரையில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, போலீசார் அந்த ஏரிக்கரைக்கு விரைந்து சென்று அங்கு பிணமாக கிடந்த ஹுலியாவின் உடலை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட பிலிப்போவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

Next Story

57 முறை காதலியை குத்திக் கொன்ற இளைஞர்; வினோத தண்டனை அளித்த நீதிமன்றம்

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

The court acquitted him for some strange reason for girlfriend  lost her life in italy

 

இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் டிமிட்ரி ஃப்ரிகானோ. இவரும் அதே நாட்டைச் சேர்ந்த எரிகா ப்ரிட்டி (25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2017இல் இவர்கள் இருவரும் தங்களது வீட்டில் உணவு உட்கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே சிறிய சண்டை ஏற்பட்டது. இந்த சண்டை கையை மீறிய சண்டையாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த டிமிட்ரி தனது காதலியை கத்தியை வைத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். மொத்தம் 57 முறை தனது காதலியைக் குத்தி கொடூரமாகக் கொன்றுள்ளார்.

 

இது குறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு, அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இருப்பினும், அவர் தொடுத்த மேல்முறையீடு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் அவர் 2022 ஆம் ஆண்டு வரை சிறைக்கு செல்லவில்லை. இதனிடையே, டிமிட்ரியின் உடல் எடை சுமார் 120 கிலோவாக இருந்துள்ளது. இதன் பிறகு சிறைக்கு சென்ற அவருக்கு வழக்கமான உணவு வழங்கப்பட்டுள்ளது. இதில் அவருடைய எடை 200 கிலோ வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அவர் நடக்கமுடியவில்லை என்று கூறப்படுகிறது. 

 

இதனை தொடர்ந்து, இது குறித்து சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், சிறையில் அவருக்கென தனியாக குறைந்த கலோரி உணவுகளைக் கொடுக்க முடியாது என்று கூறினர். இதனை விசாரித்த நீதிமன்றம்,  ’அதிக எடையால் அவதிப்பட்டு வரும் டிமிட்ரி இப்போது உடல் எடையைக் குறைக்க வேண்டும். இதற்கு அவர் குறைந்த அளவு கலோரி உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், சிறையில் குறைந்த கலோரி உணவிற்கு வாய்ப்பு இல்லை. அவர் சிறையில் தொடர்ந்து இருந்தால் அது அவரது உயிருக்கு ஆபத்தாக முடியும். அதனால், அவர் சிறையில் இருக்க தேவையில்லை. அதற்கு பதிலாக அவர் வீட்டு சிறையில் இருக்கலாம்’ என நீதிமன்றம் உத்தரவிட்டது.