Skip to main content

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வழிகாட்டு நெறிமுறைகள் - உலக சுகாதார நிறுவனம் வெளியீடு!

Published on 26/08/2021 | Edited on 26/08/2021

 

world health organization

 

உலகத்தில் 1.4 பில்லியன் மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகவும், அதில் 14 சதவீதம் பேர் மட்டுமே இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தும் செய்து வெளியிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம்.

 

இந்த திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இருதய நோய் பாதிப்பு உள்ளவர்களின் இரத்த அழுத்த அளவு 130-ஐ தொட்டாலே அவர்கள், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இதய நோய் பாதிப்பற்றவர்களின் இரத்த அழுத்த அளவு 140/90 ஆக இருந்தால் அவர்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

அதேபோல் ஒருவருக்கு சோதனையின்போது 130-139 / 80-89 என இரத்த அழுத்த அளவு இருந்தால், அந்த நபர் ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் இரத்த அழுத்த அளவை சோதித்துக்கொள்ள வேண்டும் எனவும், ஒருவேளை அவருக்கு இதய பாதிப்பு இருந்தால் ஒரு வருடத்திற்கு முன்னதாகவே  இரத்த அழுத்த அளவை சோதித்துக்கொள்ள வேண்டும் எனவும் உலக சுகாதார மையத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் கூறுகின்றன.

 

கடந்த 21 வருடங்களில் உலக சுகாதார நிறுவனம், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வெளியிடும் முதல் வழிகாட்டு நெறிமுறை இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோபத்திற்கும் இரத்த அழுத்தத்திற்கும் என்ன சம்பந்தம்? - விளக்குகிறார் டாக்டர் சங்கர்

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

 

Dr Sankar Health tips

 

சிடுசிடுவென கோபப்படுகிறவர்களை ப்ளட் பிரசர் ஓவராகிடுச்சு என்று சொல்வதுண்டு. உண்மையில் கோபத்திற்கும் இரத்த அழுத்தத்திற்கும் என்ன தொடர்பு என்பது குறித்து பிரபல மருத்துவர் சங்கர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்

 

ரத்த அழுத்தத்துக்கும், கோபத்துக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை. கோபப்பட்டால் கார்டிசால் போன்ற ஹார்மோன்கள் உடலில் ஏறும். அதன் மூலம் ரத்த அழுத்தம் ஏற்படும். மனதினால் உடலில் ஏற்படும் நோய்கள், உடலினால் மனதில் ஏற்படும் நோய்கள் என்று இரண்டு வகைகள் உள்ளன. உதாரணத்துக்கு, முட்டி வலி ஏற்பட்டால் அது குறித்த சிந்தனையில் மனமும் ஈடுபட்டு மன அழுத்தம் ஏற்படுகிறது. மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் சரியானால் உடலில் பல்வேறு சிக்கல்கள் சரியாகும். திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை சிந்தித்துக்கொண்டே இருந்தால் அது ஒரு நோயாக மாறும்.

 

குடிபோதை என்பது கூட பல நேரங்களில் நோயாக மாறுகிறது. அழுத்தங்களைக் கொடுப்பதில் எது பிரதானமாக இருக்கிறது என்பதை அறிந்து அதற்கு முதலில் சிகிச்சை அளிப்போம். சில நேரங்களில் இந்தப் பிரச்சனையை மருந்து இல்லாமலும் குணப்படுத்த முடியும். நம்முடைய உடலிலேயே மிகப்பெரிய உறுப்பு என்பது நம்முடைய தோல் தான். அதில் வியர்வை மூலம் அசுத்தங்கள் வெளியேறுகின்றன. மலக்குடலில் உள்ள பாக்டீரியாக்கள் தான் பல பிரச்சனைகளுக்குக் காரணம். உடலில் அலர்ஜி ஏற்படுவதற்கு பெரும்பாலும் பாக்டீரியாக்கள் தான் காரணம்.

 

மலக்குடலில் சிறு துவாரங்கள் ஏற்பட்டு, அந்த நச்சுக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. ரத்த பரிசோதனை செய்யும்போது அதனை நம்மால் அறிந்துகொள்ள முடியும். இதற்கென்று சிறப்பு பயிற்சி எடுக்க வேண்டும். ஒருவருடைய வயதைக் குறைக்கும் சிகிச்சை என்பது அவருடைய தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால் அவருடைய தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும். வயதானவர்களுக்கும் உடல் உறுப்புகளை வேகமாக செயல்பட வைக்க முடியும். அவர்களுடைய நடவடிக்கைகளில் அதை நம்மால் உணர முடியும்.

 

நம்முடைய தவறான வாழ்க்கை முறைகள், உணவு முறைகள், தூக்கமின்மை ஆகியவை தான் விரைவிலேயே வயதானவர்கள் போல் நம்மை ஆக்குகிறது. சில இளைஞர்களுக்கு முடி நரைத்திருக்கும். உடலுக்குத் தேவையான மினரல்கள் இல்லாததுதான் அதற்கான காரணம். அதற்கான மருந்துகள் கொடுத்து அதை நாம் சரிப்படுத்தலாம். சிலருக்கு வயதான பிறகும் கூட முடி நரைக்காது. தோலுக்கு அடியில் இருக்கும் நீர்ச்சத்து நன்றாக இருந்தால் பிரச்சனைகள் வராது.

 

 

 

 

 

Next Story

கரோனாவுக்கு எதிராக மேம்படுத்தப்பட்ட தடுப்பூசி தேவைப்படலாம் - உலக சுகாதார நிறுவனம்!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

WORLD HEALTH ORGANISATION

 

இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள கரோனா  அலைக்கு ஒமிக்ரான் வகை கரோனாவே காரணம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையே பல்வேறு நாடுகள் கரோனா பரவலை கட்டுப்படுத்த பூஸ்டர் டோஸ்களை செலுத்தி வருகின்றனர். இஸ்ரேல், சிலி உள்ளிட்ட நாடுகள் நான்காவது டோஸ் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தத் தொடங்கியுள்ளன.

 

இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப குழு, கரோனாவுக்கு எதிராக மேம்படுத்தப்பட்ட தடுப்பூசி தேவைப்படலாம் என கூறியுள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப குழு கூறியுள்ளதாவது: உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த அளவிலான பாதுகாப்பு தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்ய,தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை மேம்படுத்த வேண்டியிருக்கலாம்.

 

தொடர்ந்து பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட வேண்டிய தேவையைக் குறைக்கும் பொருட்டு தடுப்பூசிகள் பரந்த, வலுவான மற்றும் நீடித்த நோயெதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்த வேண்டும். தற்போதுள்ள தடுப்பூசிகளை பூஸ்டர்களாக மீண்டும் மீண்டும் செலுத்துவது நிலையானதாகவோ, இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு  உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப குழு கூறியுள்ளது.