ADVERTISEMENT

உலகக்கோப்பை இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் 48 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது!

03:48 PM May 06, 2019 | santhoshb@nakk…

2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைப்பெறவுள்ளது . இந்நிலையில் ஒவ்வொரு நாடுகளும் உலகக்கோப்பையில் விளையாட உள்ள கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது . அதே போல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் உலக மக்கள் அனைவரும் பார்க்கும் முக்கிய போட்டிக்களாக உள்ளனர் . இந்த போட்டி ஜூன் 16 அன்று இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது . இதே மைதானத்தில் இந்தியா மற்றும் மேற்கு இந்தியத்தீவுகள் அணிகள் ஜூன் 26 ஆம் தேதி மோதுகின்றன . ஆனால் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 48 மணி நேரத்தில் விற்று தீந்ததாக கிரிக்கெட் மைதான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் என்பது அதிக எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தக்கூடியது .இது குறித்து மைதான நிர்வாகத்தில் உள்ள ஒருவர் கூறுகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியை விட இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு அதிகம் பேர் கூடுவார்கள் என தெரிவித்துள்ளார் . இந்த மைதானத்தில் இந்தியர்கள் அதிக அளவில் பங்கேற்று கடந்த காலங்களில் இந்திய அணியை உற்சாகப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது . அதே போல் இதுவரை நடந்த உலகக்கோப்பை ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியதே இல்லை என்பது அனைவரும் அறிந்ததே ஆகும் . மேலும் போட்டியின் போது பாரத் ஆர்மியின் சார்பில் பஞ்சாபி பாடகர் குரு ரன்தாவா பாடவுள்ளார் .

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT