Skip to main content

தன் இதயத்தை தானே கண்ட பெண்; இங்கிலாந்தில் சுவாரசியம்

Published on 21/05/2023 | Edited on 21/05/2023

 

The woman who found her own heart; Interesting in England

 

இங்கிலாந்தில் உள்ள பெண் ஒருவர், 16 ஆண்டுகளுக்கு முன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் தன் உடலில் இருந்து அகற்றப்பட்ட தன் இதயத்தை அருங்காட்சியகத்தில் பார்வையிட்டார்.

 

ஜெனிஃபர் சுட்டன் என்ற பெண் லண்டன் ஹாம்ப்ஷயரில் உள்ள ரிங்வுட் பகுதியைச் சேர்ந்தவர். 22 வயதாக இருந்தபோது சுட்டன் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது மலைகளில் நடப்பது போன்ற உடற்பயிற்சிகளை செய்வதில் தனக்கு சிரமம் இருப்பதை உணர்ந்துள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் பரிசோதனை செய்த அவருக்கு ரெஸ்டிரிக்டிவ் கார்டியோமயோபதி நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இந்த நோய், உடல் முழுவதற்கான ரத்தத்தை வெளியேற்றும் இதயத்தின் திறனை குறைக்கும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு நோயாகும். இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யவில்லை எனில் சுட்டன் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து இதய மாற்று அறுவை சிகிச்சை பெறுவதற்கான காத்திருப்புப் பட்டியலில் இணைந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தனது ரத்த மாதிரியை கொண்ட நன்கொடையாளர் ஒருவரிடம் இருந்து இதயம் பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டார்.  

 

The woman who found her own heart; Interesting in England

 

தொடர்ந்து உடல் நலம் தேறிய சுட்டன், ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் தனது இதயத்தை ஒரு காட்சிக்கு பயன்படுத்த அனுமதித்தார். அந்த இதயம் இப்போது ஹோல்போர்னில் உள்ள அருங்காட்சியகத்தில் அது அனைவருக்கும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 38 வயதாகும் சுட்டன், 16 வருடங்கள் முன் எடுக்கப்பட்ட தனது இதயத்தை அருங்காட்சியகத்தில் மீண்டும் கண்டுள்ளார். இது குறித்து கூறுகையில், உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதற்காக நடவடிக்கை எடுக்க விரும்புகிறேன். நான் நம்ப முடியாத அளவிற்கு பிஸியாக இருக்கிறேன். சுறுசுறுப்பாக இருக்கிறேன். இந்த இதயத்தை முடிந்தவரை ஆரோக்கியமாக வைத்திருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவின் சுழல் கூட்டணியால் ஆட்டம் கண்ட இங்கிலாந்து

Published on 07/03/2024 | Edited on 09/03/2024
England were played by India's spinning alliance

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரை சதம் கடந்து 79 ரன்களில் ஆட்டம் இழந்தார். பேர்ஸ்டோ 29 ரன்களில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்த நட்சத்திர ஆட்டக்காரர்  ஜோ ரூட் 24 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

England were played by India's spinning alliance

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில்  ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 8 ஓவர்களில் 26 ரன்களுடன் ஆடி வருகிறது. ரோஹித் 20, ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

வெ.அருண்குமார்  

Next Story

IND vs ENG : இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
IND vs ENG : 192 runs target for Indian team

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் (23.02.2024) தொடங்கியது. அதன்படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி 307 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 192 ரன்களை இலக்கை இந்திய அணிக்கு  நிர்ணயித்துள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் 5 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும்,  ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

மேலும் இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 35 வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.