Skip to main content

28 ஆண்டுகளுக்கு பின் கண் விழித்த தாய்...நெகிழ வைத்த மகனின் முதல் கேள்வி...

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

28 ஆண்டுகளுக்கு பின் ஒரு பெண் கோமாவிலிருந்து கண்விழித்த சம்பவம் அமீரகத்தில் நடந்துள்ளது. அமீரகத்தை சேர்ந்த முனிரா அப்துல்லா கடந்த 1991 ஆம் ஆண்டு தனது 4 வயது மகன் ஒமர் வெபய்ரைப் பள்ளியில் இருந்து காரில் அழைத்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் காரின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் மகன் ஒமரைக் காப்பாற்றும் பொருட்டு அவரை கட்டியணைத்தவாறே காருக்குள் கிடந்தார் முனிரா. முனிரா கைக்குள் இருந்த ஒமர் சிறிய காயங்களுடன் தப்பினார். ஆனால் அவரது தாயோ பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.

 

woman wakes up from coma after 28 years

 

 

தொடந்து 28 ஆண்டுகளாக சிகிச்சை நடந்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இவரை பற்றி தகவல் அறிந்த அமீரக இளவரசர் முனிராவின் சிகிச்சை செலவுகளை ஏற்றுக்கொண்டார். அதன்பின் ஜெர்மனி நாட்டிற்கு அழைத்துச்செல்லப்பட்ட அவர் அங்கு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

28 ஆண்டுகால தீவிர சிகிச்சைக்கும், காத்திருப்புக்கு கிடைத்த வெற்றியை முனிரா தனது கண்களை திறந்து கோமாவை விட்டு வெளியே வந்தார். அப்போது அவர் அருகில் அவரது மகன் ஒமர் அவரை பார்த்து புன்னகைத்துள்ளார். கடைசியாக 4 வயதில் தன் மகனை பார்த்த தாய் மீண்டும் அவருக்கு 32 வயதான போது தனது மகனை பார்த்தார்.

பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்ட அவர், பதிலுக்கு தன் மகனை பார்த்து புன்னகைத்துள்ளார். 28 ஆண்டுகளுக்கு பிறகு சுயநினைவுடன் தன் தாயை பார்த்த ஒமர் தன் தாயிடம், " ''அம்மா நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா?'' என கேட்டுள்ளார். உடைந்த தழுதழுத்த குரலில், ''ஆம்'' என பதிலளித்திருக்கிறார் முனிரா. அதற்கு ஒமர் ''உங்களை நான் இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என பதிலளித்துள்ளார்.

இது பற்றி பின்னர் ஒமர் அந்நாட்டு ஊடகங்களில் பகிர்ந்துகொண்டபோது, "நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். எந்தப் பிரச்சினை என்றாலும் மனதை தளர விடாமல் நம்பிக்கையுடன் காத்திருங்கள். முயற்சி செய்யுங்கள். ஒரு நாள் எல்லாமே மாறும். உங்களுக்குப் பிடித்தமானவர்கள் மீதான நம்பிக்கையை எப்போதும் இழந்துவிடாதீர்கள். இதற்கு என் அம்மாவே வாழும் ஆதாரம்தான்" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நீதி மறைந்து நிர்வாணமாக நிற்கிறது” - அரபு மண்ணிலிருந்து ஓங்கி ஒலிக்கும் குரல்கள்

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

Indians working in Arab countries have condemned the Manipur issue

 

மணிப்பூர் சம்பவத்தால் நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் போராட்டக் குரல்கள் கேட்கத் தொடங்கி இப்போது கடல்கடந்தும் ‘சேவ் ஃபார் மணிப்பூர்’ என்று கண்ணீரோடு போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

 

குவைத் நாட்டிற்கு பிழைக்கச் சென்ற இந்தியர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி பல்வேறு வாசகங்களுடன் கூடிய பதாகைகள் ஏந்தித் தங்கள் கண்டனக் குரல்களை ஓங்கி ஒலித்துள்ளனர்.

 

“இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றக் கடல் கடந்து வந்துள்ளோம். ஆனால் இந்தியாவில், மணிப்பூர் சம்பவத்தால் இந்திய தேசமே தலைகுனிந்து நிற்கிறது. நீதி மறைந்து நிர்வாணமாக நிற்கிறது. பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவராக இருந்தும் மௌனம் காப்பது ஏன் என்று நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.இப்படி ஒரு நிலை நடந்திருப்பது வேதனையாக உள்ளது. 70 நாட்களுக்குப் பிறகு வந்த காணொளியிலேயே இப்படி நடந்திருக்கிறது என்றால் 70 நாளில் வேறு என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். நாங்கள் சாதி, மதம் இல்லாமல் இந்தியனாக ஒற்றுமையாக நிற்கிறோம். இதே போல உலகமெங்கும் உள்ள இந்தியர் ஒன்று கூடி தீர்வு காண வேண்டும். இதை வெறுமன 3 பேரை கைது செய்து மறைத்துவிட நினைக்கிறார்கள்” என்றனர். மேலும், ‘சேவ் பார் மணிப்பூர்’ என்று  உரக்க குரல் எழுப்பியும் உள்ளனர்.

 

 

Next Story

அமீரகத்தில் தமிழக பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்; உதவிக்கரம் நீட்டிய அறக்கட்டளை

Published on 02/07/2023 | Edited on 02/07/2023

 

charity that helped a Tamilnadu girl who was cheated by agents in the UAE

 

திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியினை சார்ந்தவர் முத்து மகேஸ்வரி. இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைக்காக வரவழைக்கப்பட்டு பின் ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட்டு பாஸ்போர்ட்டை பறிகொடுத்து நிராயுதபாணியாக விடப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவரது நிலை அறிந்து தமிழ்நாட்டைச் சார்ந்த மேலும் சில ஏஜெண்டுகள் இவரை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சுரண்டி துன்புறுத்தி இருக்கிறார்கள்.

 

மகேஸ்வரி துபாயில் உணவு உட்கொள்வதற்கு உணவும் இல்லை, செய்வதற்கு வேலையும் இல்லை, நாட்களை கழிக்க பணமும் இல்லை ஊருக்கு திரும்பி செல்ல பாஸ்போர்ட்டும் இல்லை என்ற அவல நிலையில் பல நாட்களாக மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனை சமூக ஆர்வலர்கள் மூலம் அறிந்த அன்வர் அலி என்ற நபர் தனது நிமிர் அறக்கட்டளையின் மூலமாக முத்து மகேஸ்வரிக்கு தேவையான அத்துணை உதவிகளையும் ஆவணங்கள் இல்லாமல் தங்கியதற்கான அபராத கட்டணம் ,பாஸ்போர்ட் இல்லாமல் பயணிக்க தற்காலிக பயண அட்டை (Outpass)இந்திய அரசு ஆவணம், விமான பயண டிக்கெட் உட்பட ஊருக்கு செல்வதற்கான அனைத்து ஆவணங்களை தயார் செய்து உதவி கொடுத்து சொந்த ஊருக்கு திரும்பும் வரை அவருக்கு தேவையான உதவிகளையும் செய்துகொடுத்திருக்கிறார். 

 

மேலும் இன்று(2.7.2023) காலையில் முத்து மகேஸ்வரியை துபாய் விமான நிலையத்திற்கு நேராக வந்து வழியனுப்பிவைத்திருக்கிறார் அன்வர் அலி. இதையடுத்து நிமிர் அறக்கட்டளையின் தலைவர் அன்வர் அலிக்கு கண்ணீர் மல்க முத்து மகேஸ்வரி நன்றி தெரிவித்தார்.  மேலும் மகேஸ்வரி அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் இன்னும் பல்வேறான ஏழை பெண்களை ஏமாற்றி சுரண்டி வருவதை அறிந்த அன்வர் அலி அவர்கள் சம்பந்தப்பட்ட ஏஜெண்டுகள் மற்றும் அவரை துன்புறுத்திய துபாயில் உள்ள ஏஜென்ட்கள் என அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி நீதி கிடைக்க தமிழக அமைச்சர்கள் மூலமாக தமிழக முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு சென்று சட்ட போராட்டத்தை நிமிர் குழுவினர் முன்னெடுப்பார்கள் என்றும் அன்வர் அலி மகேஸ்வரிக்கு உறுதியளித்துள்ளார்.