Advertisment

ஓட்டம் பிடித்த ராஜபக்சேக்கள்... இலங்கையின் அடுத்த அதிபர் யார்?

Who will be the next President of Sri Lanka?

Advertisment

தொடர்ச்சியாக இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறை, ராணுவம்,பொதுப்போக்குவரத்துஆகிய மூன்று துறைகளுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்திருந்தது.பொதுப்போக்குவரத்து தவிர எந்தவொரு தனியார் வாகனமும் இயங்காத சூழலில் உணவுப்பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொருஇடத்திற்குகொண்டு செல்வதற்கோ, மருந்துப் பொருட்களைகொண்டு செல்வதற்கோ மிகப்பெரிய சிரமத்தைஇலங்கை மக்கள்சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பொருளாதாரநெருக்கடிக்குதீர்வு காணாத இலங்கை அதிபர்கோத்தபயராஜ்பக்சேபதவி விலக வலியுறுத்தி, இலங்கை முழுவதும் பொதுமக்கள், இளைஞர்கள்,கிரிக்கெட்வீரர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் மாளிகையின் நான்குபுறமும் போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளதை அறிந்த இலங்கை அதிபர்கோத்தபயராஜபக்சே அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர் ராணுவ தலைமையகத்தில் தஞ்சமடைந்துள்ளதாகவும், அங்கு அவர் பலத்த பாதுகாப்புடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவேமஹிந்தராஜபக்சேவும்ஓட்டம் பிடித்தநிலையில் அவரது வீட்டையும் போராட்டக்காரர்கள் தீவைத்துகொளுத்திய காட்சிகள் வெளியாகி இருந்தது.

இதனிடையே, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். தற்போது அதிபர் மாளிகை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்த போராட்டக்காரர்கள், அங்குள்ள சொகுசுகார்களைஓட்டி மகிழ்ந்தனர். இலங்கையில் அசாதாரண சூழ்நிலை நிலவும் நிலையில், இலங்கை நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தைக்கூட்டசபாநாயகருக்குபிரதமர் ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் இலங்கை அரசியலமைப்பு விதிகளின்படி இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்அபேவர்தனதற்காலிக அதிபராக நியமிக்கப்படவாய்ப்புள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து கட்சிகள் அடங்கிய அரசை உருவாக்க வேண்டும் என்றும், அதிபர் கோட்டாபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என பெரும்பாலான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.மறுபுறம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகமறுப்பதாகவும், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டக்காரர்கள் அடுத்தபடியாக அவரது இல்லத்தை முற்றுகையிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

struggle Rajapaksa srilanka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe