இந்தியாவில்கோவாக்சின்,கோவிஷீல்ட்ஆகிய தடுப்பூசிகள் முழுமையான பயன்பாட்டில் உள்ளன. அதேசமயம்கோவாக்சின்தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின்அவசரக்காலஅங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால்கோவாக்சின்செலுத்திக்கொண்டவர்கள்வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால்கோவாக்சின்தடுப்பூசிக்குஅவசரக்காலஅங்கீகாரம் கேட்டு,பாரத்பயோடெக்நிறுவனம் விண்ணப்பித்தது. மேலும்,கோவாக்சின்தடுப்பூசியின் ஒப்புதலுக்குத் தேவையான தரவுகளைப்பாரத்பயோடெக்நிறுவனம், கடந்த ஜூலை ஒன்பதாம் தேதி சமர்ப்பித்தது. இதன்பிறகு,கோவாக்சின்தடுப்பூசிக்குஅவசரக்காலஅங்கீகாரம் வழங்குவது குறித்து நான்கு முதல் ஆறு வாரங்களில் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை நிபுணர் சௌமியா ஸ்வாமிநாதன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆகஸ்ட் மாதத்தில்கோவாக்சின்தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால்கோவாக்சின்தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் எப்போதுஅவசரக்காலஅனுமதி அளிக்கும் என நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டகேள்விக்குப்பதிலளித்த மத்திய அரசு,மற்றகரோனாதடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க உலக சுகாதார நிறுவனம் எடுத்துக்கொண்ட நேரத்தின் அடிப்படையில் பார்த்தால்,அவசரக்காலஅனுமதிக்கான நடைமுறை முடிவடைய, தரவுகள் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறதுஎனக்கூறியது.
இதனால்கோவாக்சின்தடுப்பூசிக்கு எப்போது அனுமதி கிடைக்கும்எனத்தெரியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில்கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசிகளுக்கான உதவி இயக்குநர்ஜெனரல்டாக்டர்மரியங்கேலாசிமாவோ,கோவாக்சின்தடுப்பூசிக்குஅவசரக்காலஅனுமதி அளிப்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் செப்டம்பர் மாதத்தின் இடைப்பகுதியில் முடிவெடுக்கலாம்எனத்தெரிவித்திருந்தார்.
இந்தச்சூழலில்கோவாக்சினுக்குஅனுமதி வழங்குவது குறித்து உலக சுகாதார நிறுவனம், இந்த வாரத்தில்முடிவெடுக்கவுள்ளதாகத்தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.