who stops hcqs in corona treatment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கரோனா வைரஸ் சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தைப் பயன்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

Advertisment

கரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் பரவல் தடுப்பு முயற்சிகளில் மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயினை பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்தது. மேலும், சுகாதாரப் பணியாளர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என ஐ.சி.எம்.ஆர். பரிந்துரைத்தது. இதனையடுத்து உலக நாடுகள் பலவும் இந்த மருந்தைத் தங்கள் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கோரிக்கை வைத்தன. இதனை ஏற்ற இந்திய அரசும் பல நாடுகளுக்கு இந்த மருந்தை ஏற்றுமதி செய்தது. இதனிடையே, ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும், இதய கோளாறுகளை உண்டாக்கும் எனவும் சில ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர்.

இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் 671 மருத்துவமனைகளில் கரோனா பாதிப்புக்குள்ளான 96,000 நோயாளிகளிடம் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 15,000 நோயாளிகளுக்கு ஆண்டி பாடியுடன் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தைச் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த சிகிச்சை நோய் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறப்பை ஏற்படுத்துவதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனையடுத்து கரோனா வைரஸ் சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தைப் பயன்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்றுக்குச் சாத்தியமான சிகிச்சையான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளை "தற்காலிகமாக" நிறுத்தி வைப்பதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment