Skip to main content

"ஒமிக்ரான் சமூக பரவலாக மாறினால்..." - அதிர்ச்சி தகவல் வெளியிட்ட உலக சுகாதார நிறுவனம்!

Published on 13/12/2021 | Edited on 13/12/2021

 

mn

 

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'ஒமிக்ரான்' எனும் புதிய வகை கரோனா தற்போது உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன. இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில், வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் தற்போது ஜனவரி மாதம்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே, வட மாநிலங்களில் கரோனா தொற்று கடந்த இரண்டு தினங்களாக அதிகரித்துவருகிறது. மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை சீராக அதிகரித்துவருகிறது. தற்போது ஆந்திர மாநிலத்திலும் ஒமிக்ரான் தொற்று பாதித்த முதல் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் சில மருத்துவ அய்வு நிறுவனங்கள், ஒமிக்ரான் தொற்று எதிர்பார்க்கும் அளவுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது, உயிரிழப்பு எண்ணிக்கையும் மிக மிக குறைவாக இருக்கும். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் நிலைமை மாறலாம் என்று தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில், இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் தற்போது புதிய தகவலைத் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒமிக்ரான் தொற்று தடுப்பூசியின் செயல்திறனை வெகுவாக குறைப்பதாகவும், இந்த தொற்று சமூகப் பரவலாக உருவெடுத்தால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், டெல்டா வைரஸை விட இது மிகவும் அபாயகரமான வைரஸ் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜே.என்.1 கொரோனா பாதிப்பு

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
JN1 corona virus in Coimbatore
கோப்புப்படம் (மாதிரிப் படமாக இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது)

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன்பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பு ஊசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்தச் சூழலில் இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனினும் இது குறித்து பொதுமக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை என சுகாதாரத்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கோவையில் உள்ள புலியகுளம் என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனாவின் புதிய திரிபான ஜே.என்.1 தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் முதன்முறையாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஜெ.என். 1 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் ஜே.என்.1 தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்ததையடுத்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; ஈரோட்டில் ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

 

covid related prevention action taken severe at erode district

 

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மீண்டும் மார்ச் மாதம் முதல் வேகமாக பரவ தொடங்கியது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த 3 வாரத்திற்கும் மேலாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே இரண்டு இலக்கில் பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு தற்போது மூன்று இலக்கில் பதிவாகி வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத் துறையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். முன்புபோல் முக கவசம் அணிய வேண்டும். கை கால்களை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலும் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் கடந்த ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகள்,அரசு மருத்துவமனை, நகர்ப்புற, கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் நர்சுகள், மருத்துவர்கள், நோயாளிகள், நோயாளிகளை பார்க்கும் வரும் உறவினர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்ற புதிய உத்தரவு அமலுக்கு வந்தது.

 

மேலும், அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்றும் (10.04.2023) நாளையும் (11.04.2023) கொரோனா தடுப்பு அவசர கால ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், கொடுமுடி போன்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மருத்துவமனைகளில் போதிய அளவு படுக்க வசதி உள்ளதா ஆக்சிஜன் வசதி உள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

 

இதைப்போல் மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் கையிருப்பு  உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை தினமும் இரண்டு, மூன்று பேர் பாதிப்பு உள்ளாகி வருகின்றனர். ஒரு வாரத்திற்கு 400 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாளையும் ஈரோடு அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு அவசர கால ஒத்திகை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.