Advertisment

பூண்டு சாப்பிட்டால் கொரோனா வராதா..? - உலக சுகாதார அமைப்பு விளக்கம்!

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இருந்த போதிலும் இதுவரை இந்தியாவிலும் 31பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை இந்திய அரசாங்கம் தற்போது உறுதி செய்துள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சில நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பெரிய அளவில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் எவ்வித உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால் உலக நாடுகளில் உயிரிழப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சீனாவுக்கு சிறிதும் தொடர்பில்லாத நாடுகளில் கூட கொரோனா வைரஸ் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பூண்டு சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வராது என்ற ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. அதில், பூண்டு சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகாரிக்கும் என்பது உண்மையாக இருந்தாலும், கொரோனா வைரஸ் பரவாது என்பது முற்றிலும் வடிக்கட்டிய பொய் என்று தெரிவித்துள்ளது. மேலும் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்குமாறுஅந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Garlic
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe