ADVERTISEMENT

அறிகுறிகள் அற்ற கரோனா பிறருக்கு பரவுவது என்பது மிகவும் அரிதானது... - உலக சுகாதார அமைப்பு விளக்கம்

08:34 PM Jun 10, 2020 | suthakar@nakkh…



உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 73 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 7000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 2,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

ADVERTISEMENT


உலக சுகாதார அமைப்பு இதுதொடர்பாக பல்வேறு தகவல்களையும், பொதுமக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற வழிமுறைகளை அடிக்கடி கூறிவருகிறார்கள். இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தொற்று நோய் நிபுணர் மரியாவான் கெர்கோவ் பல்வேறு தகவல்களை தற்போது தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, " அறிகுறிகள் இல்லாத கரோனாவால் ஆபத்து இல்லை. அது மற்றவர்களுக்கு பரவுவது என்பது மிகவும் அரிதானது. அறிகுறி இல்லாதவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு எவ்வளவு சதவீதம் இது பரவுகின்றது என்பது இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருந்து வருகின்றது" என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT