என்ன நடக்கிறது ஃபேஸ்புக்கில்...?

ff

உலகம் முழுக்க மொத்தம் 30 மில்லியன் நபர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டுள்ளது என்று கடந்த மாதம் இறுதியில் ஃபேஸ்புக் நிறுவனம்அளித்திருந்தது. அதனைத்தொடர்ந்து மக்கள் எல்லாம் அச்சத்தில் ஆழ்ந்திருக்க, ஹாக் செய்யப்பட்ட கணக்குகளிலிருந்து யாருடைய தனிப்பட்ட விவரங்களையும் ஹாக்கர்கள் எடுக்கவில்லை என்று அறிவித்தது. மேலும் இதுதொடர்பாக போலீசில் புகார் செய்து விசாரணை நடந்துவருவதாக தெரிவித்திருந்தது. அதற்கடுத்துஹாக் செய்யப்பட்ட கணக்குகளில் 14 மில்லியன் கணக்குகளின் தனிப்பட்ட விவரங்களான ஃபோன் நம்பர், கணக்கில் உள்ள நண்பர்கள் யார் போன்றவைகளை எல்லாம் ஹாக்கர்ஸ் திருடியுள்ளதாக அதிர்ச்சித்தகவலை அளித்திருந்ததுஃபேஸ்புக் நிறுவனம். ஆனால், தற்போது புதிதாக இன்னொரு அதிர்ச்சித்தகவல் வெளிவந்திருக்கிறது. ஹாக் செய்யப்பட்டஃபேஸ்புக் கணக்குகள் எதுவும் அரசியல் நோக்கங்களுக்காக ஹாக் செய்யப்படவில்லை மாறாக நிதி சம்பந்தமாகதான் ஹாக் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹாக்ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும்போலியான மார்க்கெட்டிங் நிறுவனங்களால்ஸ்பம் (spam) வழியில்பொய்யான நிதிதகவல்களைஅளித்து,அந்த நிறுவனங்கள் மூலமாகத்தான் இந்த ஹாக் நடந்து இருக்கிறது என்றும் அறிவித்துள்ளது. இதுபோன்ற தொடர்ச்சியான சம்பவங்களால்ஃபேஸ்புக்கில்என்ன நடக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

Facebook hacker
இதையும் படியுங்கள்
Subscribe