Skip to main content

"சூரியனை தொட்டுவிட்டோம்" - வரலாற்று தருணத்தை அறிவித்த நாசா!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

sun

 

சூரிய வளிமண்டலத்தின் வெளிப்புற பகுதி சூரிய கரோனா என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் நிலவும் ஈர்ப்பு விசை மற்றும் காந்த விசை, சூரிய பொருட்களை வெளியேறவிடாமல் தடுக்கும் அளவிற்கு வலுவாக உள்ளது. இந்தநிலையில், அந்தக் கரோனா பகுதிக்குள் பார்க்கர் சோலார் ப்ரோப் என்ற விண்கலம் நுழைந்து சென்று வரலாறு படைத்துள்ளது. சூரியனின் வளிமண்டலத்தில் ஒரு விண்கலம் நுழைவது இதுவே முதன்முறையாகும்.

 

பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலம், இதுவரை எந்த விண்கலமும் செல்லாத அளவிற்கு சூரியன் அருகில் சென்று, அதனை ஆராய்வதற்காக நாசாவால் கடந்த 2018ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் 28ஆம் தேதியே நிகழ்ந்த இந்த சரித்திர சம்பவத்தை நாசா தற்போது பகுப்பாய்வு மேற்கொண்டு உறுதி செய்துள்ளது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NASA (@nasa)

 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த நிகழ்வு குறித்து பதிவிட்டுள்ள நாசா, நாங்கள் சூரியனைத் தொட்டுவிட்டோம் என தெரிவித்துள்ளது. மேலும் நாசா, "சந்திரனில் தரையிறங்கியது, அது எப்படி உருவானது என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவியது போல, சூரியனைத் தொட்டது, நமது நெருங்கிய நட்சத்திரம் பற்றியும், சூரிய குடும்பத்தில் அதன் தாக்கம் பற்றியும் முக்கியமான தகவல்களைக் கண்டறிய விஞ்ஞானிகளுக்கு உதவும்" என கூறியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்த அப்டேட் கொடுத்த ஆதித்யா எல் - 1 விண்கலம்!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
The next update was the Aditya L-1 spacecraft

இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி (02.09.2023) காலை 11.50 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டது.

இந்நிலையில் ஆதித்யா எல் 1 விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. ஆதித்யா எல் 1 விண்கலத்தில் உள்ள புறஊதா கதிர் மூலம் இயங்கும் தொலைநோக்கியில் எடுத்த புகைப்படங்கள் முதல் முறையாக இஸ்ரோ சார்பில் அதிகாரப்பூர்வமான வெளியிடப்பட்டுள்ளன. மேலும் சூரியனைச் சுற்றியுள்ள குரோமோச்பியர் மண்டலத்தை வெவ்வேறு அலைநீளத்தில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக ஆதித்யா எல்1 விண்கலம் சூரிய அனல் குழம்பில் இருந்து வெளியாகும் அதிதிறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதல் முறையாக படம் எடுத்து அனுப்பிய படத்தை இஸ்ரோ கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. ஆதித்யா எல்1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் என்ற கருவி இதனை பதிவு செய்துள்ளதாகவும், இந்த பதிவு எலக்ட்ரான் முடுக்கத்தை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அப்டேட் கொடுத்த ஆதித்யா எல்1 விண்கலம்

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Aditya L1 spacecraft that gave the update

 

ஆதித்யா எல்1 விண்கலம் சூரிய அனல் குழம்பில் இருந்து வெளியாகும் அதிதிறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதல் முறையாக படம் எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி (02.09.2023) காலை 11.50 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டது.

 

இந்நிலையில் இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், “ஆதித்யா எல்1 விண்கலம் கடந்த 29 ஆம் தேதி சூரிய அனல் குழம்பில் இருந்து வெளியாகும் அதிதிறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதல் முறையாக படம் எடுத்து அனுப்பியுள்ளது. ஆதித்யா எல்1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் என்ற கருவி இதனை பதிவு செய்துள்ளது. இந்த பதிவு எலக்ட்ரான் முடுக்கத்தை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவுடன் கிராப் வடிவிலான படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.