Skip to main content

’பழைய சரித்திரத்திற்கு கோவை திரும்பி விடக்கூடாது’ - சி.பி.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Published on 22/03/2018 | Edited on 22/03/2018
cp rathakrishnan

 

மாநில அரசை குறை சொல்வதை போல தீவிரவாதத்திற்கு ஆதரவான நிலையை  மாநில அரசு எடுக்க வேண்டும் என்பதற்காக  திமுக, அதன் கூட்டணி கட்சிகள் நினைப்பை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் ரத யாத்திரை பல இடங்களுக்கு சென்றும் தமிழகத்திற்கு வந்தால் பிரச்னை வரும் என்று சொல்வதன் மூலம் மதவாத சக்திகள் பின்னால் திமுக இருப்பதை காண்பிக்கிறது எனவும் மத்திய கயிறு வாரியத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

 கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பாஜக மாவட்ட தலைவர் நந்தகுமார் இல்லத்திற்கு வந்து பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கயிறு வாரிய தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணன், ’’கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவம் கடந்த காலங்கள் சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது எனவும் எத்தகைய தவறுகளை செய்ய ஆரம்பித்தாலும் காவல்துறையினரின் நடவடிக்கை இல்லாத வண்ணம் பிற அரசியல் கட்சிகள் பார்த்துக்கொள்ளும் என பாதுகாப்பு உணர்வை தீவிரவாதிகள் பெற்றிருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் காவல்துறையினர் புலனாய்வை முடக்கிவிட்டு, இதுபோன்று செய்ய திட்டமிட்டிருப்பவர்களை கூட கைது செய்ய வேண்டும் என கூறிய அவர், திருமா, வைகோ, ஸ்டாலின் ஆதரித்தாலும் வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

குறிப்பாக பழைய சரித்திரத்திற்கு கோவை திரும்பி விடக்கூடாது என கூறிய அவர், ரத யாத்திரம் பல இடங்களுக்கு சென்றும் தமிழகத்திற்கு வந்தால் பிரச்னை வரும் என்று சொல்வதன் மூலம் மதவாத சக்திகள் பின்னால் திமுக இருப்பதை காண்பிப்பதாகவும், இதனால் அடிச்சுவடு இல்லாமல் அவர்கள் போய்விடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

 

வன்முறை யார் செய்தாலும் தவறு தான். நடுநிலையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே அரசு ஒத்துழைப்பு தான் உள்ளது. அரசியல் ஒத்துழைப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் மாநில அரசை குறை சொல்வதை போல தீவிரவாதத்திற்கு ஆதரவான நிலையை  மாநில அரசு எடுக்க வேண்டும் என்பதற்காக  திமுக, அதன் கூட்டணி கட்சிகள் நினைப்பை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்பு! 

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Sambhai Soren sworn in as Jharkhand Chief Minister

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பெரும் எதிர்பார்ப்புடன் ஆட்சியில் அமர்ந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வந்தது. இந்த சூழலில், முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் தற்போது சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ஜனவரி 20 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதே சமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர், ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் (31.01.2024) சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். முன்னதாக மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

மேலும் ஜார்கண்ட் மாநில அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து ஆட்சியமைக்க சம்பாய் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை அடுத்து ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் இன்று (02.02.2024) பதவியேற்றுள்ளார். இவருக்கு அம்மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்றனர். 

Next Story

ஜார்க்கண்ட் முதலமைச்சராக சம்பாய் சோரன் இன்று பதவியேற்பு!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Champai Soren, sworn in as Jharkhand Chief Minister today

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பெரும் எதிர்பார்ப்புடன் ஆட்சியில் அமர்ந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வந்தது. இந்த சூழலில், முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் தற்போது சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ஜனவரி 20 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதே சமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர், ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் (31.01.2024) சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். முன்னதாக மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து ஜார்கண்ட் மாநில அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து ஆட்சியமைக்க சம்பாய் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை அடுத்து சம்பாய் சோரன் இன்று (02.02.2024) ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்கிடையே கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையால் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு ஒரு நாள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.