ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், இந்தியாவில் மூன்று கிளை நிறுவனங்களை நடத்திவருகிறது.
இந்திய நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஃபோக்ஸ்வேகன் குரூப் சேல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் மூன்று நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து இயக்க முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமையான ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஸ்கோடா நிறுவனத்தினால் தொடங்கப்பட்டுள்ள ‘இந்தியா 2.0’ என்ற மறுசீரமைப்பு நடவடிக்கை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.