Skip to main content

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாருக்கு அமெரிக்காவில் பிறந்தநாள் விழா...

Published on 11/09/2018 | Edited on 11/09/2018
VOC

 

 

அமெரிக்காவின் முதல் மாநிலமாம் டெலவரில் செப்டம்பர் 8 அன்று "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்" அவர்களின் 146வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  நண்பகல் 12:00 மணியளவில் தொடங்கிய விழாவில் டெலவர், பென்சிலவேனியா மற்றும் நியூ செர்சியைச் சேர்ந்த தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
 

தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது இவ்விழா. திரு.தங்கம் வையாபுரி வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து சிறுவர்களுக்கான ஓவியப்போட்டி இருபிரிவாக நடைபெற்றது. 7 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும், 8 வயது முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும் கலந்து கொண்டு வ.உ.சி. அவர்களின் படத்தை வரைந்து அசத்தினார்கள்.
 

சிறுவர்களுக்கான வினாடி, வினா போட்டியில் நான்கு குழுவினர் கலந்து கொண்டு அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறி நடுவர்களையே கலங்கடித்தனர். 5 சுற்றில் முடிய வேண்டிய போட்டி 16 வது சுற்றில் முடிவடைந்தது.  அதுவே, அமெரிக்க வாழ் தமிழ்க் குழந்தைகள் எந்த அளவிற்கு ஆர்வத்துடன் வ.உ.சி-யைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பி, கேள்வி பதில்களைப் புரிந்து, உள்வாங்கி படித்து வந்தனர் என்பதற்கு சாட்சி.
 

பின்னர் பெரியவர்களுக்காக நடந்த பேச்சுப்போட்டியில் பலர் கலந்து கொண்டு "வ.உ.சி-யை நாம் ஏன் போற்ற வேண்டும்?" என்ற தலைப்பில் உரையாற்றினர்.  அதில் முதல் பரிசை தட்டிச்சென்றார் திரு.செல்வகுமார் வேலு.  திருமதி. ரமா ஆறுமுகம் மற்றும் திருமதி. பாரதிக் கண்ணன் அருமையாகப் பேசி இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசை பெற்றுச்சென்றனர்.
 

விழாக்குழுவில் ஒருவரான திரு.பிரசாத் பாண்டியன் விழாவினை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். இடையிடையே வ.உ.சி-யின் வரலாற்றுச் செய்திகளையும், அவரைப் பற்றிய பல சுவையான செய்திகளையும் பகிர்ந்துக்கொண்டார்.
 

தமிழகத்திலிருந்து வந்திருந்த திரு.கோ.அரங்கநாதன் அவர்கள் விழாவில் தொடக்க உரையாற்றினார். அவர் உலகத் தமிழ்க்கழக மயிலாடுதுறை கிளைத்தலைவராக உள்ளார். அவர் வ.உ.சி-யின் தமிழ் பற்றை பற்றி இணையத்தில் அறியப்படாத பல தகவல்களையும், வ.உ.சி-யின் பல நற்குணங்களையும் வந்திருந்தோருக்கு எளிமையாக எடுத்துக் கூறினார்.
 

விழாவின் சிறப்பு விருந்தினராக திரு. மகேந்திரன் பெரியசாமி உரையாற்றினார். திரு. மகேந்திரன் கெண்டக்கி மாகாண கவர்னர் விருது பெற்றவரும், வாஷிங்டனில் இயங்கி வரும் எனெர்ஜில் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தினன் நிறுவனரும், தலைமைச் செயலூக்க அதிகாரியும் ஆவார்.  அவர் "வ.உ.சிதம்பரனார் விடுதலை போராட்டத்தில் அடைந்த இன்னல்களை விவரித்து கூறினார். பிற விடுதலைப் போராட்டத் தலைவர்கள் அரசியல் விடுதலை மட்டுமே கோரிய காலத்தில் பொருளாதார விடுதலைக் கொள்கையை முன்னெடுத்தவர் எனவும், தென்னகத்தின் அடையாளமாக இந்தியா முழுவதும் புகழ் அடைந்தவர்" எனவும் வ,உ,சி-யின் திறமைகளையும், போராட்ட அணுகு முறைகளையும், பெருமைகளையும் அருமையாக விளக்கிப் பேசினார்.


 

VOC


 

அதன் பின் தூத்துக்குடியில் வாழும் வ.உ.சி-யின் உறவினாரான திரு.முருகேசன் அவர்கள் பதிந்து அனுப்பிய வாழ்த்தும், வ.உ.சி-யைப் பற்றிய அரிய செய்திகளையும் கொண்ட காணொளி பகிரப்பட்டது.
 

இவ்வினிய விழாவில் கப்பலோட்டிய தமிழன் படத்தில் வரும் பாரதியார் பாடலான "சிந்து நதியின் மிசை நிலவினிலே" என்கிற பாடலை சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒய்வுபெற்ற ஆசிரியை திருமிகு. வசந்த கோகிலா அவர்கள் கணீர் குரலில் பாடி அசத்தினார். 
 

விழாக்குழுவில் ஒருவரான திரு.இராஜ்குமார் வ.உ.சி-யையும் தற்கால அரசியல் நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பேசினார்.  திரு.சல்மான் அவரகள் வ.உ.சி-யின் சாதி, மதம் கடந்த அவரது முற்போக்கு எண்ணங்களை விவரித்துப் பேசினார்.
 

பின்னர் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது.
 

இறுதியாக விழாக்குழுவில் ஒருவரான  திரு.துரைக்கண்ணன் ஆற்றிய நன்றியுரையில் "வ.உ.சி-யை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதற்காக, இத்தகைய விழாக்களை நடத்துவதோடு மட்டுமல்லாமல், அவ்விழாக்களில் ஓவிய போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது" என்றார்.  விழாவினை ஒருங்கிணைக்க உதவிய நண்பர்களுக்கும், போட்டியில் பங்கேற்ற குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள், பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் என அனைவருக்கும் தனது உள்ளார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.  அத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.  விழாவில் பங்கேற்றவர்கள் தனித் தன்மை வாய்ந்த தமிழக விடுதலைப் போராளி வ.உ.சி பற்றிய பல அரிய செய்திகளை தெரிந்துகொண்ட மனநிறைவோடு சென்றதைக் காணமுடிந்தது.

 

வ.உ.சி. சில குறிப்புகள்:
 

1. ஒட்டப்பிடாரத்தில் செப்டம்பர் 05, 1872ம் ஆண்டு பிறந்தார்
2. வழக்கறிஞராக லஞ்சம் மற்றும் பொய் வழக்குகளுக்கு எதிராக வாதாடினார்.
3. கோரல் மில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வேலை நிறுத்தத்திற்கு தலைமை தாங்கினார்
4. இந்தியா பொருளாதார விடுதலை அடைவதற்கு இரண்டு கப்பல்களை மூலதனமாக கொண்டு வணிகம் புரிந்தார்.
5. பிரிட்டிஷ் அரசாங்கம் வ.உ.சி-க்கு இரண்டு ஆயுள் (40 ஆண்டுகள்) தண்டனை விதித்தது.
6. இந்திய சுதந்திரத்திற்காக செக்கிழுத்தார்
7. வ.உ.சி-க்கு தமிழ் பற்று அதிகம். அவருக்குப் பிடித்த நூல் திருக்குறள்.
8. வ.உ.சி சிறந்த எழுத்தாளர். அகமே புறம், காந்தி மார்க்கம், மெய்யறம், மெய்யறிவு, மனம் போல் வாழ்வு, வள்ளியம்மை சரித்திரம், சுயசரிதை என பல நூல்களை தமிழில் எழுதியுள்ளார்.
9. நவம்பர் 18, 1936-ல் காலமானார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால்...” - எச்சரிக்கும் டொனால்ட் டிரம்ப்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
warns Donald Trump If I'm not elected president

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட்  ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. 

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இதற்கிடையே, குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப்போவது யார் என்பதற்கான தேர்தல், அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டது. அதில், ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்கு செல்வாக்கு பெரும் நபர் தான், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அந்த வகையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து, அந்த கட்சியைச் சேர்ந்தவரான நிக்கி ஹாலே போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. 

இதனையடுத்து, கடந்த 3 ஆம் தேதியும் 5 ஆம் தேதியும் வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, நிக்கி ஹாலே போட்டியில் இருந்து விலகினார். இதன் மூலம் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் நியமிக்கப்பட்டார். அதேபோல், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் ஓஹியோவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டொனால்ட் டிரம்ப், “என்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் அமெரிக்கா மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும். மெக்சிகோவில் கார்களை உருவாக்கி அமெரிக்கர்களுக்கு விற்கும் சீன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நான் அதிபரானால், கார்களை அமெரிக்காவில் விற்க முடியாது. இந்த முறை நான் அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால், ஜோ பைடனால் நாட்டில் வன்முறை வெடிக்கும். இதனால், மக்கள் என்னை ஆதரிக்க வேண்டும்” என்று கூறினார். 

Next Story

‘புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது’ - அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
India's response to America for CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார். 
 

India's response to America for CAA

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சி.ஏ.ஏ சட்டத்திற்கு கவலை தெரிவிப்பதாக அமெரிக்கா கூறியது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அறிவிப்பு குறித்து விவரங்களை கடந்த 11 ஆம்  தேதி இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு எங்களுக்கு கவலையளிக்கிறது. இந்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை அளித்தல் மற்றும் அனைத்து சமூகங்களையும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது தான் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த விமர்சனத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் உள்விவகாரம். சி.ஏ.ஏ என்பது குடியுரிமை வழங்குவது; குடியுரிமையைப் பறிப்பது அல்ல. எனவே இது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டும். இந்த சட்டம் நாடற்ற தன்மையின் பிரச்சினையைக் குறிக்கிறது. மனித கண்ணியத்தை வழங்குகிறது மற்றும் மனித உரிமைகளை ஆதரிக்கிறது. சி.ஏ.ஏ சட்டம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் கருத்துக்கள் தவறானவை மற்றும் தேவையற்றவை என்று நாங்கள் கருதுகிறோம். டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது.

India's response to America for CAA

துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியை வாக்கு வங்கி அரசியல் நோக்கில் மட்டும் பார்க்கக் கூடாது. இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் பிராந்தியத்தின் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு ஆகியவை குறித்து சரியான புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. இந்தியாவின் நலம் விரும்பிகள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நோக்கத்தை வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.