பல வருடங்களாக உள்நாட்டு போரில் அவதிப்பட்டு வரும் சிரியாவில், கடந்த இரண்டு வாரங்களாக கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் இட்லிப் நகரை மீட்பதற்காக சிரியா ஆர்மியும் ரஷ்யாவும் கூட்டாக இணைந்து வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பலரும் தங்க வீடின்றி நகரை விட்டு வெளியேறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
சிரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள சாராகுஃப் பகுதியிலிருந்து உள்நாட்டுப் போர் காரணமாக வலுக்கட்டாயமாக பல குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில் அப்துல்லா முகமத் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வெளியேற்றப்பட்டதால் தற்போது தன் நண்பரின் இல்லம் இருக்கும் சர்மதா பகுதியில் வசித்து வருகிறார்கள்.
அவர்கள் தங்கியிருக்கும் பகுதியின் அருகே சிரிய அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் வான்வெளி சண்டை நடந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு வெடிகுண்டு சத்தங்கள் சகஜமான ஒன்றாக மாறியுள்ளது. அந்த பகுதிகளில் வாழும் குழந்தைகள் இதுபோன்ற சத்தத்தால் பெரிதும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Show comments