Skip to main content

எலி வேட்டை... அதிக உடல் எடை... பறக்க மறந்த ஆந்தை!

Published on 07/02/2020 | Edited on 08/02/2020

எலிகளை அதிகம் சாப்பிட்டதால் ஆந்தைக்கு விநோதமான பிரச்சனை ஒன்று வந்துள்ளதை தற்போது மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இங்கிலாந்தின் போக் ஆந்தைகள் சரணாலயத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்தை ஒன்றை அதிகாரிகள் கொண்டு வந்தனர்.கடந்த மூன்று மாதங்களாக அந்த ஆந்தை பறக்கவில்லை என்பதையும் சரணாலய மருத்துவரிடம்  அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் ஆந்தையை நன்கு சோதித்தனர். 



அப்போது ஆந்தையின் உடல் எடை 245 கிராம் இருப்பதை கண்டறிந்துள்ளனர். ஆந்தைகளின் சராசரி எடையை விட இதன் எடை அதிகமாக இருப்பதே ஆந்தை பறக்க முடியாமல் அவதிப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும், ஆந்தை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் நிறைய எலிகள் இருந்துள்ளதையும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளார்கள். இதனால் எலிகளை  ஆந்தை அதிகம் சாப்பிட்டதால் உடல் எடை கூடியிருப்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். தற்போது ஆந்தைக்கு டயட் பயிற்சியினை மருத்துவர்கள் அளித்து வருகிறார்கள். விரைவில் ஆந்தை பறக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

கார் ஓட்டுநரை தாக்கிய லாரி ஓட்டுநர்; கதறி அழுத மனைவி

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Lorry driver hits car driver; A crying wife

 

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள ரேடியல் சாலையில் கார் ஒன்றின் மீது லாரி மோதிய சம்பவத்தில் கார் ஓட்டுநருக்கும் லாரி ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், லாரி ஓட்டுநர் கார் ஓட்டுநரை அவருடைய மனைவி முன்பே தாக்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ரேடியல் சாலையில் லாரி மோதியதில் கார் சேதமடைந்தது. இதனால் கார் ஓட்டுநர் லாரி ஓட்டுநரிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்பொழுது லாரி ஓட்டுநர் அலட்சியமாக பதில் சொன்னதாலும், ஆபாசமாக பேசியதாலும் லாரியின் சாவியை கார் ஓட்டுநர் எடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரில் வந்த நபரின் மனைவி முன்பே லாரி ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் வந்த நபரின் மனைவி கதறி அழுது கூச்சலிட்ட நிலையிலும் அவர் மீது தாக்குதல் தொடர்ந்தது. இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பல்லாவரம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.