Skip to main content

”வரி கட்டினாயா?” - “அட்வான்ஸா கட்டிட்டேன்” - நேருக்கு நேர் விவாதத்தில் டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பிடென்!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

 

usa president election final debats trump vs joe biden

 

நவம்பர் 3- ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிபர் வேட்பாளர்கள் பரபரப்பான விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடென் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பிடெனின் இறுதிக்கட்ட விவாதம் நடைபெற்றது.

 

ஜோ பிடென் : கரோனாவை எதிர்த்துப் போராட ட்ரம்பிடம் எந்தத் திட்டமும் இல்லை.

 

டொனால்ட் ட்ரம்ப் : கரோனாவுடன் வாழ மக்கள் கற்றுக் கொண்டனர்; அமெரிக்காவில் கரோனாவால் இறப்போர் விகிதம் குறைந்துள்ளது.

 

usa president election final debats trump vs joe biden

 

ஜோ பிடென் அமெரிக்காவில் வரும் மாதங்களில் மேலும் 2 லட்சம் பேர் கரோனாவால் இறப்பார்கள்.

 

டொனால்ட் ட்ரம்ப் : கரோனாவில் இருந்து 99% இளைஞர்கள் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவுக்கு கரோனா பரவ நான் காரணமில்லை; தவறு செய்தது சீனாதான்; இந்தாண்டு இறுதிக்குள் கரோனாவுக்கு தடுப்பூசி வந்துவிடும். 

 

ஜோ பிடென் : சீனாவில் டொனால்ட் ட்ரம்புக்கு ரகசிய வங்கிக் கணக்குகள் இருப்பதாக குற்றம்சாட்டினார்.

 

டொனால்ட் ட்ரம்ப்: சீனா, ரஷ்யா, உக்ரைனிடம் இருந்து பணம் எதுவும் பெறவில்லை.

 

ஜோ பிடென் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய வரியையே கட்டவில்லை.

 

டொனால்ட் ட்ரம்ப்: கோடிக்கணக்கில் முன்கூட்டியே வரி செலுத்தி விட்டேன். பிடென் குடும்பம் தவறான வழிகளில் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. எனது வங்கிக் கணக்குகள் அனைத்தும் வெளிப்படையானவை.

 

usa president election final debats trump vs joe biden

 

ஜோ பிடென் : தவறான வழிகளில் ட்ரம்ப் குடும்பம் சம்பாதித்துள்ளது; ட்ரம்ப் சீனா உதவியுடன் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்க தேர்தலில் குறுக்கிட வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன.

 

டொனால்ட் ட்ரம்ப்: வட கொரியாவுடன் நல்ல உறவை விரும்புகிறோம். வட கொரியா விவகாரத்தில் ஒபாமா செய்ய முடியாததை நாங்கள் செய்தோம்; வட கொரியா விவகாரத்தை ட்ரம்ப் ஒபாமா சிக்கலாக்கி வைத்திருந்தார்.

 

cnc

 

ஜோ பிடென் : வட கொரிய அதிபர் கிம் நல்ல மனிதர் என ட்ரம்ப் கூறியிருந்தார்; ஒபாமா கேர் காப்பீட்டுத் திட்டம் சிறப்பானது. தனியார் நிறுவன காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்குவேன். அதிபர் ட்ரம்பால், அமெரிக்காவில் ஒரு கோடி பேர் காப்பீட்டை இழந்து விட்டனர்.


டொனால்ட் ட்ரம்ப் : சீனா, ரஷ்யாவை போல் இந்தியாவிலும் காற்று மாசடைந்து உள்ளதாக குற்றம்சாட்டினார். 

 

டொனால்ட் ட்ரம்ப் : வேலை வாய்ப்பு திட்டங்களுக்கு நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி அனுமதியளிக்கவில்லை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.