கரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ரெம்டெசிவர் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ட்ரம்ப் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா பாதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நலமுடன் இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்பின் இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறோம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த அக்டோபர் 2- ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்புக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா இருப்பது உறுதிச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.