Skip to main content

தைவானை அச்சுறுத்தும் சீனா; பாதுகாப்பிற்கு வருமா அமெரிக்கா? - ஜோ பைடன் பதில்!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

JOE BIDEN

 

சீனாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாகத் தைவான் தனி நாடாக உருவானது. இருப்பினும் சீனா தைவானை தங்கள் நாட்டில் இருந்து பிரிந்த ஒரு மாகாணமாகவே கருதுவதோடு, மீண்டும் அந்தநாட்டை தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவர முயன்று வருகிறது.

 

இதற்காகச் சீனா படைபலத்தையும் உபயோகிக்கத் தயாராகவே உள்ளது. இந்தநிலையில் அண்மைக்காலமாகத் தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்தில் அதிக அளவிலான சீனா விமானங்கள் ஊடுருவி அச்சுறுத்தி வருகின்றன. இதற்கிடையே அண்மையில் சீன அதிபர் தைவான் குறித்துப் பேசும்போது, 'தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்றுப் பணி நிறைவேற்றப்பட வேண்டும்" எனவும் 'தைவான் மக்களின் நலனுக்காக அமைதியான வழியில் அந்த இலக்கை அடையவேண்டும்" எனவும் தெரிவித்தார்.

 

இருப்பினும் தொடர்ந்து சீனா, போர் விமானங்கள் தைவானை அச்சுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் சி.என்.என் ஊடக நிகழ்ச்சி ஒன்றில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் சீனா தைவானைத் தாக்கினால், அமெரிக்கா தைவானைப் பாதுகாக்குமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

 

அதற்கு ஜோ பைடன், ஆம்...நாங்கள் அதற்காக உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். தைவான் தன்னை பாதுகாத்துக்கொள்ள வழிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே அந்தநாடு தொடர்பான அமெரிக்காவின் கொள்கையாக இருந்து வருகிறது. ஆனால் தைவானை நேரடியாகப் பாதுகாப்பதாக அமெரிக்கா எப்போதும் தெரிவித்ததில்லை. இந்த சூழலில் ஜோ பைடன் தைவானைச் சீனா தாக்கினால் பாதுகாப்போம் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அதேநேரத்தில் தைவான் தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Powerful earthquake in Japan

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. சுமார் 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கின. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி  இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  படுகாயம் அடைந்த 800க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் முன்னெச்சரிக்கையாக இந்தோனேசியா மற்றூம் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகின. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளொகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. 

Next Story

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Powerful earthquake in Taiwan; Tsunami warning in Japan

தைவானில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கி உள்ளன. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

அதே சமயம் தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.