Skip to main content

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

Published on 06/12/2019 | Edited on 07/12/2019

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று சில திருடர்கள் துப்பாக்கிகளுடன் புகுந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் கோரல் கேபில்ஸ் பகுதியில் உள்ள அந்த நகைக்கடைக்கு விரைந்து சென்றனர். காவல்துறையினர் வருவதை அறிந்து கொண்ட திருடர்கள், ஒரு தனியார் பார்சல் நிறுவனத்தின் வாகனத்தை வழிமறித்து, ஓட்டுனரை பிணைக்கைதியாக வைத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.


காவல்துறையினர் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து திருடர்களை துரத்திச் சென்றனர். அந்த வாகனம் ப்ரோவார்டு பகுதிக்கு வந்த போது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது. அப்போது காவல்துறையினரை நோக்கி திருடர்கள் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காவலர்கள் பதில் தாக்குதல் நடத்தியதால் அந்த இடத்தில் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு திருடர்கள், வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் பொது மக்களில் ஒருவர் என மொத்தம் 4 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் நகைக்கடை ஊழியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

மணிப்பூர் கலவரம்; கண்டவுடன் சுட உத்தரவு

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

Governor orders to shoot rioters on sight in Manipur

 

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களைப் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

இதற்காகப் பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கும் சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. முன்னதாக மணிப்பூர் கலவரம் குறித்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் மாநிலம் மணிப்பூர் எரிகிறது. தயவு செய்து உதவுங்கள்” எனப் பதிவிட்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை டேக் செய்திருந்தார். 

 

இதனைத் தொடர்ந்து மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், “இந்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் வன்முறைகள் நடந்துள்ளன. இவை இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தவறான புரிதல்களால் நடந்துள்ளன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது” என்றார். இந்த நிலையில் கலவரக்காரர்களைக் கண்டவுடன் சுட, அம்மாநில ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து கலவரம் நீடித்து வரும் நிலையில் கலவரத்தைக் கட்டுப்படுத்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.  

 

 

Next Story

டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு!!

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

Firing in Delhi Court!!

 

டெல்லியில் இன்று சாகேத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் உடையில் வந்த ஒருவர் எதிர்பாராத விதமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். நீதிமன்ற வளாகத்தில் 4 முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

 

படுகாயமடைந்த பெண் ஆபத்தான நிலையில் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மர்ம நபரால் அப்பெண் சுடப்பட்டபோது அவர் தனது வழக்கறிஞருடன் இருந்துள்ளார். துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தினர். அதில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர் குற்றப் பின்னணி கொண்டவர் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 

முன்னதாக 24 செப்டம்பர் 2022 அன்று, டெல்லியின் ரோகினி நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர்கள் போல் உடையணிந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.  ராகுல் தியாகி மற்றும் ஜக்தீப் ஜக்கா எனும் பெயர் கொண்ட அவர்கள் இருவரும் நீதிமன்ற அறைக்குள் நுழைவதற்காக வழக்கறிஞர்கள் போல் காட்டிக்கொண்டு, கேங்ஸ்டர் கோகி என்கிற ஜிதேந்தர் மான் மீது தொடர்ச்சியான துப்பாக்கிச்சூட்டினை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.