ADVERTISEMENT
ADVERTISEMENT
மும்பையிலிருந்து, துபாயின் ஃபுஜைரா நகருக்கு கடலுக்கடியில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என துபாயை சேர்ந்த ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது. அபுதாபியில் நடைபெற்ற இந்தியா யு.ஏ.ஈ கூட்டு மாநாட்டில் இது குறித்து பேசப்பட்டது. இந்த திட்டம் தற்பொழுது ஆரம்ப நிலையில் உள்ளது. கண்டிப்பாக வருங்காலத்தில் இது செயல்படுத்தப்படும் என கூறப்பட்டது. இந்த திட்டம் மூலம் இந்திய அமீரக உறவு மேம்படும், ஏற்றுமதி, இறக்குமதிக்கு உதவியாக இருக்கும் எனவும் இந்த திட்டம் குறித்து அதன் வடிவமைப்பாளர் அப்துல்லா அல்ஷெஹி கூறினார்.
Show comments