Skip to main content

ஓய்வு பெறும் முடிவை எடுக்கக் காரணம்... அண்டர்டேக்கர் அஞ்சிய தருணம்!

Published on 24/06/2020 | Edited on 24/06/2020
under taker

   

 

90ஸ் கிட்ஸ்க்கு பல சூப்பர் ஹீரோக்கள் உண்டு. அதில் முக்கியமான ஒருவர்தான் WWE மல்யுத்த விளையாட்டின் முன்னோடி வீரரான அண்டர்டேக்கர். சமீபத்தில் இவர் குறித்து வெளியான ஆவணப்படமான 'தி லாஸ்ட் ரைட்'டில் தனது ஓய்வு குறித்து மனம் திறந்திருக்கிறார் 'அண்டர்டேக்கர்' என்னும் மார்க் கால்வே.

 


55 வயதை கடந்துள்ள அண்டர்டேக்கர், பலராலும் 'டெட் மேன்' என்று அறியப்பட்டார். ஆம், சாவுக்கே சாவு பயத்தை காட்டியவர் என்பதை போலதான் 90ஸ் கிட்ஸ் இவரை பார்த்து வந்தனர். 'அண்டர்டேக்கருக்கு ஏழு உசுருடா' என்ற கதையை 90ஸ் கிட்ஸ் கண்மூடித்தனமாக நம்பியதற்கு முக்கிய காரணம் நெடுநெடுவென்ற உயரம், நீண்ட முடி, கருப்பு உடை என இருந்த  இவருடைய மிரட்டல் தோற்றம். 

 

 

நியாயத்திற்காக சண்டை போடும் சினிமா ஹீரோ இறுதியில் வென்றுவிடுவார் என எவ்வளவு நம்பியிருப்போமோ அந்தளவிற்கு அண்டர்டேக்கர் சண்டை போட்டால் எதிராளி காலி என்பதை நம்பினார்கள். இவரைத் தொடர்ந்து இந்தப்  போட்டியில் பல லெஜண்டுகள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அண்டர்டேக்கர் ஏற்படுத்திய அந்தத் தாக்கம் என்ன என்பது சிறு பிள்ளை பிராயத்திலிருந்து இந்த ஷோவை பார்ப்பவர்களுக்குப் புரியும். வளர்ந்த பிறகு இந்தப் போட்டியே பொய், இது ஒரு பித்தலாட்டம், நம்மை பார்க்க வைப்பதற்காக இவர்கள் அடிவாங்குகிறார்கள், அவர்கள் அடித்துக்கொள்வது உண்மை இல்லை என்பதை உணர்ந்த தருணத்திலும் கூட 'அண்டர்டேக்கருக்கு ஏழு உசுரு இல்லை' என்பதை நம்புவது பலருக்கு சிரமமாக இருந்தது.
 

under taker

 

அண்டர்டேக்கர் என்றாலே நம் நினைவுக்குள் அழகாக இருள் சேர்ந்துகொள்ளும், க்ரேவ் யார்ட் இசை டங் டங் என்னும் மணி ஓசையுடன் நம்மை அச்சப்படுத்தும், சிறுவயதில் பேய்ப்படம் என்றாலே குழந்தைகள் பயப்படுவார்கள். ஆனால், கண்ணை மூடிக்கொண்டு விரல் ஓட்டையில் பேயை பார்ப்பார்கள். அதுபோன்ற ஒரு அனுபவத்தை, வியப்பைதான் அண்டர்டேக்கரின் எண்ட்ரி நமக்கு ஏற்படுத்தியது. இன்னும் இதுபோல பல விஷயங்களை அண்டர்டேக்கர் ஏற்படுத்திய தாக்கம் என்று சொல்லலாம். மல்யுத்த வீரர் என்பதை தாண்டி சிறந்த நடிகராக இருந்தாரோ என்னவோ. இன்று உலக அளவில் பெரும் தொகையை சம்பளமாகப் பெறுவது இந்த ஷோவில் மல்யுத்த வீரராக இருந்து இப்போது ஹாலிவுட் நடிகராகிவிட்ட 'தி ராக்' என்னும் ட்வெயின் ஜான்சன்தான்.

 

 

அண்டர்டேக்கருக்கு ஏழு உயிர் என்னும் கதையை பேசிப் பேசி வியந்திருப்போம். ஆனால், தற்போது அண்டர்டேக்கருக்கு இதிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் வந்ததற்கு அந்த உயிர்தான் காரணமாக இருக்கிறது. 'தி லாஸ்ட் ரைட்' ஆவணப்படத்தில், கடந்த ஆண்டு கோல்பெர்க்கிற்கும் அண்டர்டேக்கரும் நடைபெற்ற சண்டையில் கரணம் தப்பினால் மரணம் என்னும் அளவிற்கு உயிரை பிடித்துக்கொண்டு தப்பித்துள்ளார் இந்த டெட் மேன். ஆமாம், கோல்ட்பெர்க் அண்டர்டேக்கரை தூக்கி கீழே போடும்போது சுதாரித்துக்கொண்டிருக்கவில்லை என்றால் அண்டர்டேக்கரின் தலை தரையில் பட்டு சாவை பார்த்திருப்பார் என்று அவரே சொல்கிறார். சாவிற்கு மிக அருகில் சென்று வந்த அந்த மேட்ச்சிலிருந்துதான் ஓய்வு எடுக்கும் நேரம் வந்துவிட்டது என்பதை தான் உணர்ந்ததாகவும் தன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை நிராதரவாக நிற்க விட மனம் வரவில்லை என்றும் எமோஷனலாக பேசியுள்ளார்.

 

 

கடந்த 30 வருடங்களாக மல்யுத்தத்தின் மூலம் ரசிகர்களை மிரள வைத்த அண்டர்டேக்கர், தற்போது சாவின் விழிம்பு வரை சென்று மீண்டும் ஒரு முறை பிறந்திருக்கிறார் என்பதை உணர்கையில் உண்மையிலேயே அண்டர்டேக்கருக்கு ஏழு உயிர் என்று இன்னும் 90ஸ் கிட்ஸ் மனம் நம்பிக்கொண்டே இருக்கிறது!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விருதை திருப்பி தந்த வினேஷ் போகத்! மோடியை சாடிய ராகுல் 

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
Vinesh Phogat returned the award! Rahul condemn Modi

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக். பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்குப் பிறகு பிரிஜ் பூஷண் தலைமைப் பதவியிலிருந்து விலகிவிட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தமுள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அதிரடியாக அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு பிரிஜ் பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் மீதான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காததால் மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திருப்பி அளிப்பதாக கடந்த 22 ஆம் தேதி (22-12-23) மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்திருந்தார். மேலும் மல்யுத்த வீரர் விரேந்தர் சிங்கும், சாக்‌ஷி மாலிக்கிற்கு ஆதரவு அளிக்கும் விதமாகத் தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், பிரிஜ் பூஷண் சிங் ஆதரவாளர்கள் நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக குழுவை அமைக்கக் கோரி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்கவும், கட்டுப்படுத்தவும் தற்காலிக குழு அமைக்க வேண்டும். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, தொடர்ச்சியாக நடந்து வரும் சர்ச்சைகளுக்கு முடிவு காண வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக குழுவை அமைத்து இந்திய ஒலிம்பிக் சங்கம் உத்தரவிட்டது. இந்த குழுவின் தலைவராக பூபேந்தர் சிங் பஜ்வா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களாக எம்.எம். சோமயா, மஞ்சுஷா கன்வர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர், வீரர் - வீராங்கனைகள் தேர்வு, வங்கிக் கணக்குகளை கையாளுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வர் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26.12.2023 இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்குத் தலைவராக சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மத்திய அரசு சார்பில் தனக்கு அளிக்கப்பட்ட அர்ஜுனா விருது மற்றும் கேல் ரத்னா விருதை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்திருந்தார். அதன் படி வினேஷ் போகத், தமது கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை திரும்ப அளிக்க பிரதமர் அலுவலகத்தை நோக்கி நேற்று சென்றார். ஆனால், அவர் வழியிலேயே காவல்துறையினரால் தடுக்கப்பட்டார். இதனால் அவர், தனது இரண்டு விருதுகளையும் தலைநகரின் கர்தவ்ய பாத் முக்கிய சாலையின் நடுவில் விட்டு சென்றார். பிறகு அதனை டெல்லி போலீஸார் எடுத்து சென்றனர். 

இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “இந்த நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் சுயமரியாதையே முதன்மையானது. பிறகு தான் பதக்கங்களும் மற்ற பெருமைகளும். இந்தத் துணிச்சலான வீராங்கனைகளின் கண்ணீரைவிட உங்களது பாகுபலியால் கிடைக்கும் அரசியல் பலன்கள் முக்கியமானதா? பிரதமர் தான் இந்தியாவின் காப்பாளர். ஆனால், இத்தகைய கொடுமையில் அவருக்கும் பங்கிருப்பது வேதனை அளிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

இந்திய அரசு விருதகளை சாலையில் விட்டு சென்ற வீராங்கனை வினேஷ் போகத்! 

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
Vinesh Phogat, the player who left the Indian government awards on the road!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக். பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்குப் பிறகு பிரிஜ் பூஷண் தலைமைப் பதவியிலிருந்து விலகிவிட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தமுள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அதிரடியாக அறிவித்திருந்தார்.

Vinesh Phogat, the player who left the Indian government awards on the road!

இதனைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு பிரிஜ் பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் மீதான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காததால் மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திருப்பி அளிப்பதாக கடந்த 22 ஆம் தேதி (22-12-23) மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்திருந்தார். மேலும் மல்யுத்த வீரர் விரேந்தர் சிங்கும், சாக்‌ஷி மாலிக்கிற்கு ஆதரவு அளிக்கும் விதமாகத் தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், பிரிஜ் பூஷண் சிங் ஆதரவாளர்கள் நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக குழுவை அமைக்கக் கோரி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்கவும், கட்டுப்படுத்தவும் தற்காலிக குழு அமைக்க வேண்டும். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, தொடர்ச்சியாக நடந்து வரும் சர்ச்சைகளுக்கு முடிவு காண வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

Vinesh Phogat, the player who left the Indian government awards on the road!

இந்நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக குழுவை அமைத்து இந்திய ஒலிம்பிக் சங்கம் உத்தரவிட்டது. இந்த குழுவின் தலைவராக பூபேந்தர் சிங் பஜ்வா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களாக எம்.எம். சோமயா, மஞ்சுஷா கன்வர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர், வீரர் - வீராங்கனைகள் தேர்வு, வங்கிக் கணக்குகளை கையாளுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வர் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vinesh Phogat, the player who left the Indian government awards on the road!

கடந்த 26.12.2023 இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்குத் தலைவராக சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மத்திய அரசு சார்பில் தனக்கு அளிக்கப்பட்ட அர்ஜுனா விருது மற்றும் கேல் ரத்னா விருதை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்திருந்தார். அதன் படி வினேஷ் போகத், தமது கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை திரும்ப அளிக்க பிரதமர் அலுவலகத்தை நோக்கி நேற்று சென்றார். ஆனால், அவர் வழியிலேயே காவல்துறையினரால் தடுக்கப்பட்டார். இதனால் அவர், தனது இரண்டு விருதுகளையும் தலைநகரின் கர்தவ்ய பாத் முக்கிய சாலையின் நடுவில் விட்டு சென்றார். பிறகு அதனை டெல்லி போலீஸார் எடுத்து சென்றனர்.