Skip to main content

இந்தியாவுக்கு மிகப்பெரும் ஆபத்து... ஐ.நா பொதுச் செயலாளர் எச்சரிக்கை...

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

ஐநா சபையின் பருவநிலை தொடர்பான மாநாட்டில் உலக வெப்பமயமாதல் குறித்த அறிக்கையில், வெப்பநிலை உயர்வால் கடல்மட்டம் உயர்ந்து வருவதால், 2100 ஆம் ஆண்டுக்குள் கொல்கத்தா, மும்பை, சூரத் மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் கடல் நீர் உட்புகுவதால் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 

un secretary about global warming

 

 

இந்த நிலையில், தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஐ.நா பொதுச்செயலாளர் குட்ரஸ், "வரும் 2050-ம் ஆண்டுக்குள் 45 சதவீத அளவுக்கு கரியமில வாயு கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதேபோல பூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முன்பு கணிக்கப்பட்டதை விட தற்போது கடல் மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால், புவி வெப்பமயமாவதால் அதிகரித்து, இந்தியா, சீனா, ஜப்பான், வங்கதேசம் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் தாய்லாந்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 10 சதவீத மக்கள் வசிக்கும் நிலப்பகுதி கடலுக்குள் மூழ்க வாய்ப்புள்ளது" என கூறினார். ஏற்கனவே ஐ.நா சபை அறிக்கையில் இந்தியாவுக்கு ஆபத்து என கூறப்பட்ட நிலையில், தற்போது ஐ.நா பொதுச்செயலாளரும் அவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டோவை பயன்படுத்திய ரஷ்யா - பொதுச்சபைக்கு நகரும் நாடுகள்!

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

unsc

 

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த நேற்று முன்தினம் காலை ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்ட நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தீவிரமான தாக்குதலை நடத்தி வருகின்றது. போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும், ஏவுகணைகள் மூலமும் தொடர் தாக்குதல் நடந்து வருவதால், உக்ரைன் மக்கள் மெட்ரோ நிலையங்களில் இருக்கும் வெடிகுண்டு பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

 

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்யப்பட்டது தோல்வியடைந்துள்ளது. வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு எதிரான தீர்மானத்தை ரஷ்யா தோற்கடித்தது. அமெரிக்கா, அல்போனியா கொண்டுவந்த தீர்மானத்திற்கு 11 நாடுகள் ஆதரவளித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய 3 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

 

இதனையடுத்து ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள், ஒரு கூட்டறிகையை வெளியிட்டுள்ளன. அதில், இந்த விவகாரத்தை ரஷ்யாவின் வீட்டோ அதிகாரம் செயல்படாத ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக்கு எடுத்து செல்லப்போவதாக தெரிவித்துள்ளன. மேலும் உலக நாடுகள், உக்ரைன் மீதான தாக்குதலுக்கு தொடர்ந்து ரஷ்யாவை பொறுப்பாளியாக்கும் எனவும் அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே உக்ரைனில் இருக்கும் இந்திய தூதரகம், இந்தியர்களுக்கு புதிய அறிவுறுத்தல்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் உக்ரைன் எல்லை சாவடிகளில் இருக்கும் இந்திய அதிகாரிகளுக்கு தெரிவிக்காமால், யாரும் எல்லை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என  இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் மேற்கு உக்ரைன் நகரங்களில் உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகளுடன் இருப்பது, எல்லை பகுதிகளுக்கு வருவதைவிட பாதுகாப்பானது என தெரிவித்துள்ள இந்திய தூதரகம், கிழக்கு உக்ரைனில் இருப்பவர்கள் அடுத்த கட்ட அறிவுறுத்தல் வரும்வரை தற்போது இருக்குமிடத்திலேயே இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

Next Story

ஐநா சபையில் உரையாற்றும் பிரதமர் மோடி!

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

narendra modi

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது தற்போது உறுதியாகியுள்ளது. அமெரிக்காவிற்குச் செல்லும் பிரதமர் மோடி, இம்மாதம் 24ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் நடத்த இருக்கும் குவாட் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

 

இந்த குவாட் தலைவர்கள் மாநாட்டில் ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய பிற குவாட் நாட்டு பிரதமர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த குவாட் தலைவர்கள் மாநாட்டில் தங்கள் நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்துவது, கரோனாவுக்கு எதிராக போராடுவது, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர்ஸ்பேஸ் ஆகியவற்றில் கூட்டாக செயல்படுவது, சுதந்திரமான இந்தோ - பசிபிக் பிராந்தியம் ஆகியவை தொடர்பாக நான்கு நாட்டுத் தலைவர்களும் விவாதிக்கவுள்ளனர்.

 

அதன்பின்னர் பிரதமர் மோடி, இம்மாதம் 25ஆம் தேதியன்று நடைபெறவுள்ள ஐநா பொதுச் சபையின் 76வது அமர்வின் உயர்மட்ட பிரிவு பொது விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.