Advertisment

தொடரும் போர் பதற்றம்: ரஷ்யாவிடம் பணியும் உக்ரைன்?

russia

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வரும் நிலையில், தற்போது ரஷ்யா உக்ரைன் எல்லையில்படைகளைக்குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரமும் உக்ரைன் மீது படையெடுக்கும்எனக்கருதப்படுகிறது. ஆனால் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை எனக் கூறி வருகிறது. ஆனால் இதனை நம்பாத அமெரிக்கா உள்ளிட்டநேட்டோநாடுகள், உக்ரைனுக்கும், கிழக்கு ஐரோப்பாவிற்கும் அதிநவீன பாதுகாப்பு ஆயுதங்களையும்,போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பியுள்ளன. அமெரிக்கா தனது படைகளையும் கிழக்கு ஐரோப்பாவிற்கு அனுப்பியுள்ளது.

Advertisment

இந்தநிலையில் ரஷ்யா, உக்ரைனுக்கும் தங்கள் நாட்டிற்கும் அருகில் உள்ள பெலாரஸ் நாட்டில்போர்ப்பயிற்சிகளைத்தொடங்கியுள்ளது. இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்களதுநாட்டுக்குடிமக்களை உக்ரைனை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் அமெரிக்கா, ரஷ்யா இந்த வாரத்திற்குள்படையெடுப்பைத்தொடங்கலாம் எனவும் எச்சரித்துள்ளது.

Advertisment

இந்தச்சூழலில்உக்ரைன் எல்லையில் குவித்துள்ளபடைகளைத்திரும்பப்பெற ரஷ்யா விதித்த நிபந்தனைகளில் ஒன்றானநோட்டோகூட்டமைப்பில் சேரக்கூடாது என்ற நிபந்தனையைப் போரைத் தவிர்க்கும் பொருட்டு தனது நாடு ஏற்க வாய்ப்பிருப்பதாகஎனப்பிரிட்டனுக்கான உக்ரைன் தூதர்வாடிம்பிரிஸ்டைகோதெரிவித்துள்ளார். இதற்கிடையே 48 மணிநேரத்திற்குள்ளாக ஒரு பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரஷ்யாவிடம் கோரிக்கை விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்திற்கு ஐரோப்பியபாதுகாப்புக்குழுவின் முக்கிய நாடுகளின் உறுப்பினர்களை அழைக்கவும் உக்ரைன் முடிவு செய்துள்ளது.

Russia Ukraine
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe