Skip to main content

சொந்த தொகுதியில் 17 முறை கத்தியால் குத்தி கொல்லப்பட்ட எம்.பி - பிரிட்டனில் அதிர்ச்சி சம்பவம்!

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

uk mp

 

பிரிட்டன் எம்.பி டேவிட் அமெஸ், தனது தொகுதியில் உள்ள தேவாலயத்தில் வாக்காளர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, ஒருவர் அவரை கத்தியால் சரமாரியாகத் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே டேவிட் அமெஸ் உயிரிழந்தார்.

 

டேவிட் அமெஸை கொன்ற 25 வயதான சோமாலிய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நாட்டவரைக் கைது செய்துள்ளனர். எம்.பி-யை கொன்ற பிறகு அங்கேயே அமைதியாக அமர்ந்திருந்து அந்த நபர் காவல்துறையிடம் சரணடைந்துள்ளார். பிரிட்டன் எம்.பி கொல்லப்பட்டதை தீவிரவாத செயலாக அறிவித்து பிரிட்டிஷ் காவல்துறை விசாரித்து வருகிறது.

 

கொலை செய்த நபர் எம்.பி டேவிட் அமெஸை கத்தியால் குத்தியதாக 'தி சன்' ஊடகத்தின் இரண்டு பெண் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், எம்.பி கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.  "டேவிட் அமெஸ் மரணத்தால் இன்று எங்கள் இதயங்கள் அனைத்தும் அதிர்ச்சியாலும், சோகத்தாலும் நிரம்பியுள்ளன" எனத் தெரிவித்துள்ளார். டேவிட் அமெஸ் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கிடையே எம்.பி கொலையை தொடர்ந்து மற்ற எம்.பிக்களும் தங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவேண்டும் என வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
King Charles of England has cancer

இங்கிலாந்து மன்னர் 3 ஆம் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து மன்னர் 3 ஆம் சார்லஸுக்கு (வயது 73) புற்றுநோய் இருப்பது இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், நேற்று முதல் அவருக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை தொடங்கப்பட்டு இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது. புரோஸ்டேட் (prostate) என்ற சிகிச்சைக்கு சென்றபோது புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் புரோஸ்டேட் வகை புற்றுநோய் பாதிப்பு இல்லை எனவும் மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story

நடுக்கடலில் சிக்கிய கப்பல்; ஹாலிவுட்டையே மிஞ்சும் ரியல் ஹைஜாக்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

A ship stuck in the middle of the sea; a real hijack that surpasses Hollywood


நடுக்கடலில் கப்பல் ஒற்றை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கி முனையில் ஹைஜாக் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரிட்டனை சேர்ந்த தனியார் நபரின் 'கேலக்ஸி லீடர்' என்ற கப்பல் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஜப்பானிய நிறுவனம் இயக்கிவந்த இந்த கப்பலை ஹெலிகாப்டர் மூலம் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல், திடீரென கப்பலில் இறங்கி கப்பல் கேப்டனை துப்பாக்கி முனையில் மிரட்டி, கப்பலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கப்பலை ஹைஜாக் செய்தது யார் என்று தெரியாத நிலையில், ஹவுதி நாட்டின் டிவி சேனல்களில் கப்பலை ஹைஜாக் செய்த ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வீடியோ வெளியாகியுள்ளது. ஹாலிவுட் தரத்தையும் தாண்டும் அளவிற்கான இந்த ரியல் ஹைஜாக் காட்சிகள் உலக அளவில் பேசுபொருளாகி வருகிறது.

 

இந்நிலையில் கப்பலில் சிக்கியுள்ள 25 குழுவினர்களும் இஸ்லாமிய சட்டப்படி நடத்தப்படுவர் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.