Skip to main content

கொரோனாவை விடக் கொடிய நோய்; எச்சரிக்கை விடுத்த இங்கிலாந்து நிபுணர்

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

A UK expert has issued a warning about A disease more deadly than Corona

 

கடந்த 2019 ஆம் ஆண்டில் கொரோனா எனும் பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி அதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள். இந்த நிலையில், கொரோனாவை விடப் பல மடங்கு உயிர்களைப் பலி வாங்கும் நோய் ஒன்று பரவக் கூடும் என இங்கிலாந்து சுகாதார நிபுணர் எச்சரித்துள்ளார்.

 

இங்கிலாந்து கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு குழுவின் தலைவராகப் பணியாற்றிய தொற்றுநோயியல் நிபுணர் கேட்பிங்காம் நேற்று தனியார் ஊடகத்திற்குப் பேட்டி அளித்தார். அவர் அந்த பேட்டியில், “கொரோனாவை விட அதிகமான பலியை ‘நோய் எக்ஸ்’ என்ற நோய் ஏற்படுத்தும். உலக சுகாதார நிறுவனத்தால் ‘நோய் எக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் நோய் அடுத்த சர்வதேச தொற்று நோயாக இருக்கலாம். 

 

கடந்த 1918 ஆம் ஆண்டு முதல் 1919 ஆம் ஆண்டு வரையில் ஸ்பானிஷ் ப்ளூ காய்ச்சல் உலகம் முழுவதும் 5 கோடி உயிர்களைப் பலி வாங்கியது. இது முதலாம் போரில் இறந்தவர்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும். உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் 25 குடும்பங்கள் கொண்ட வைரஸ் குடும்பங்களை அடையாளம் கண்டுள்ளனர். ஆனால், 10 லட்சத்துக்கும் மேலான கண்டுபிடிக்கப்படாத வைரஸ், மாறுபாடுகள் கொண்டவையாக இருக்கிறது. அவர் ஒரு மாறுபாட்டிலிருந்து இன்னொரு மாறுபாட்டிற்குத் தாவக்கூடிய திறன் கொண்டவை. 

 

கடந்த 2019 ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸின் தாக்கம் 2 கோடி பேரைப் பலி கொண்டவையாக இருந்தாலும், அதிலிருந்து பல பேரை நம்மால் காப்பாற்ற முடிந்தது. ஆனால், நோய் எக்ஸ் என்ற வைரஸ் நோய் எபோலாவின் இறப்பு விகிதத்திற்குச் சமமானவை. எபோலா நோய் 67 சதவீத இறப்பு விகிதத்தைக் கொண்ட வைரஸ் நோயாகும். எனவே, உலகில் எங்காவது ஒரு மூலையில் ஒருவர் ‘நோய் எக்ஸ்’ வைரஸால் விரைவில் பாதிக்கப்படலாம். இதைச் சமாளிக்கப் பெரிய அளவில் தடுப்பூசி செலுத்த நாம் தயாராக இருக்க வேண்டும்” என்று எச்சரித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Admission to Vanathi Srinivasan Hospital

 

பா.ஜ.க.வின் தேசிய மகளிர் அணி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், நவம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கிற தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வானதி சீனிவாசன் சமீபத்தில் கோவை திரும்பினார். 

 

கோவை திரும்பிய வானதி சீனிவாசனுக்கு கடந்த 4 நாட்களாகத் தீவிர காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற உடல்நலக்குறைவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்குச் சென்று உடல் பரிசோதனை மேற்கொண்டார். அந்தப் பரிசோதனையின் முடிவில், வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் அவினாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

 

இது குறித்து வானதி சீனிவாசன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது, “கொரோனா தொற்று காரணமாக கோவையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். காய்ச்சல் குறைந்துள்ளது. மற்ற அறிகுறிகள் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறேன். நலமுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

கொரோனா பரவலுக்கு யார் காரணம்? - ஆராய்ச்சியாளர் வெளியிட்ட கருத்து; அதிர்ச்சியில் உலக நாடுகள்

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

Who is responsible for the spread of Corona; Comment published by the researcher; World nations in shock

 

2019 ஆம் ஆண்டு இறுதியில் இருந்து உலகையே புரட்டிப்போட்ட கொரோனா பரவல் காரணமாக உலகில் பல நாடுகளில் ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள், குறிப்பாக, அடித்தட்டு மக்கள் பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கினர். அதேபோல் கோடிக்கணக்கில் உயிரிழப்புகளும் இருந்தன.

 

முதல் அலை, இரண்டாம் அலை என தொடர்ந்து பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் மீண்டு வரலாம் என தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று என்பது சீனா நடத்திய உயிரி தீவிரவாத தாக்குதல் என சீனாவின் யூகானை சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

யூகான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி' ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான சபோ சபோ என்பவர் சர்வதேச செய்தியாளர் சங்க உறுப்பினர் ஜெனிபர் என்பவருக்கு கொடுத்த பேட்டியில், “கொரோனா வைரஸ் சீனாவின் உயிரியல் ஆயுதம். கொரோனா தொடங்கிய 2019 ஆம் ஆண்டில் மேலதிகாரி ஒருவர் கொரோனா வைரசின் நான்கு பிரிவுகளை எனது நண்பர்களிடம் கொடுத்து இதில் எது அனைத்து உயிரினங்களிலும் எளிதாகப் பரவக்கூடியது எனக் கண்டறியச் சொன்னார்.

 

2019 ஆம் ஆண்டு சீனாவில் ராணுவ விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த பல்வேறு நாடுகளின் வீரர்களின் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவர்கள் அனுப்பப்படவில்லை. வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் தான் அனுப்பப்பட்டனர். கொரோனா வைரஸை பல்வேறு நாடுகளில் கொண்டு சேர்ப்பதற்கும், உலகம் முழுவதும் இந்த வைரஸை பரப்புவதற்கும் ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்பட்டு இருக்கலாம்'' என்று கூறியுள்ளார். சீன வைரஸ் ஆராய்ச்சியாளரின் இந்த கருத்து தற்போது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.