Skip to main content

பெண்களுக்காக அமீரகம் கொண்டுவந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம்...

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

uae law for equal pay to women in private sector

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண், பெண் இரு பாலருக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்கான சட்டம் நேற்று முதல் அந்நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளது.

 

அண்மைக்காலமாகப் பெண்கள் உரிமை தொடர்பான பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது ஐக்கிய அரபு அமீரகம். குறிப்பாகப் பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் அவர்களின் பணிச்சூழல், பாலின சமத்துவம் பின்பற்றப்படல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது அமீரகம். அந்தவகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண், பெண் இரு பாலருக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்கான சட்டம் நேற்று முதல் அந்நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, ஒரு நிறுவனத்தில் ஒரே நிலையில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு ஒரே அளவு ஊதியம் வழங்குவது உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்வர் கார்ஷ் கூறுகையில் “இது ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக எடுத்துவைக்கும் புதிய அடி. சமத்துவம் மற்றும் நீதித்துறையில் இந்த சட்டம் மாற்றங்களை உருவாக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளிர் உரிமை மாநாடு குறித்த மணல் சிற்ப ஓவியம் (படங்கள்)

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

சென்னை மெரினா கடற்கரையில் மகளிர் உரிமை மாநாடு குறித்த மணல் சிற்ப ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதனை தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பார்வையிட்டார். 

Next Story

“நீதி மறைந்து நிர்வாணமாக நிற்கிறது” - அரபு மண்ணிலிருந்து ஓங்கி ஒலிக்கும் குரல்கள்

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

Indians working in Arab countries have condemned the Manipur issue

 

மணிப்பூர் சம்பவத்தால் நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் போராட்டக் குரல்கள் கேட்கத் தொடங்கி இப்போது கடல்கடந்தும் ‘சேவ் ஃபார் மணிப்பூர்’ என்று கண்ணீரோடு போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

 

குவைத் நாட்டிற்கு பிழைக்கச் சென்ற இந்தியர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி பல்வேறு வாசகங்களுடன் கூடிய பதாகைகள் ஏந்தித் தங்கள் கண்டனக் குரல்களை ஓங்கி ஒலித்துள்ளனர்.

 

“இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றக் கடல் கடந்து வந்துள்ளோம். ஆனால் இந்தியாவில், மணிப்பூர் சம்பவத்தால் இந்திய தேசமே தலைகுனிந்து நிற்கிறது. நீதி மறைந்து நிர்வாணமாக நிற்கிறது. பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவராக இருந்தும் மௌனம் காப்பது ஏன் என்று நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.இப்படி ஒரு நிலை நடந்திருப்பது வேதனையாக உள்ளது. 70 நாட்களுக்குப் பிறகு வந்த காணொளியிலேயே இப்படி நடந்திருக்கிறது என்றால் 70 நாளில் வேறு என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். நாங்கள் சாதி, மதம் இல்லாமல் இந்தியனாக ஒற்றுமையாக நிற்கிறோம். இதே போல உலகமெங்கும் உள்ள இந்தியர் ஒன்று கூடி தீர்வு காண வேண்டும். இதை வெறுமன 3 பேரை கைது செய்து மறைத்துவிட நினைக்கிறார்கள்” என்றனர். மேலும், ‘சேவ் பார் மணிப்பூர்’ என்று  உரக்க குரல் எழுப்பியும் உள்ளனர்.