உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 50க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
உலக நாடுகளின் நிலைமைகள் இப்படி இருக்க, மத்திய ஆசிய நாடான துர்க்மேனிஸ்தான் நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் அணி தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா என்ற வார்த்தையை ஊடகங்கள் உச்சரிக்க கூட அந்நாட்டு அதிபர் குர்பங்குலி பெர்டிமுகாதேவ் அறிவித்துள்ளார். இந்த உத்தரவை ஊடகங்கள் மீறினால் கடுமையான நடவடிக்கையை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments