Advertisment

மோடியுடன் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு!

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 60-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 2500-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாகஇந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

,m

உலக நாடுகளிலும் இந்த கரோனா தொற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதன் பாதிப்பு அதிகப்படியாகவேஇருந்து வருகின்றது. அந்த நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்ற உலக நாடுகளை விட மிக அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினார். இரு நாடுகளிலும் கரோனா தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe