trump

Advertisment

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் இவர்கள் இருவரும் தொடக்கத்தில் எலியும் பூனையுமாக இருந்து வந்தனர். பின்னர், இரு அதிகபர்களுக்கும் நல்லவிதமாக பேச்சு வார்த்தை நடந்தது. கடந்த ஜூன் மாதம் இருவரும் சிங்கப்பூரில் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நேரில் சந்தித்து, சில ஒப்பந்தங்களும் போட்டுக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து கிம், ட்ரம்புக்கு கடிதங்கள் எழுதி வருவதாகவும். மீண்டும் இருவரும் நேரில் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் வெர்ஜீனியா மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பேசினார். இதுபற்றி கூறிப்பிட்டார் அப்போது, ”நாங்கள் இருவரும் காதலில் விழுந்துவிட்டோம். அவர் எனக்கு அற்புதமான கடிதங்கள் எழுதுகிறார். நாங்கள் இருவரும் காதலில் விழுந்துவிட்டோம்” என்றார்.