கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தேர்தல் வெற்றியை அங்கீகரிக்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக்கட்டிடத்திற்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். போலீஸார்துப்பாக்கிச் சூடு நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ட்ரம்ப் வன்முறையைத் தூண்டியதாகக் கூறி ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள், ட்ரம்பின்அனைத்துக் கணக்குகளையும் முடக்கின. இதன்பிறகு ட்ரம்ப் சமூகவலைதளங்களை விட்டு விலகியிருந்தார். இந்தநிலையில், அவர் மீண்டும் சமூகவலைதளத்திற்குத் திரும்பவுள்ளார். ஆனால், அவர் திரும்பி வரவுள்ளசமூகவலைதளம் என்பது அவருக்குச் சொந்தமானது ஆகும்.
இதுகுறித்து ட்ரம்பின்மூத்த ஆலோசகர் ஒருவர், ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "ட்ரம்ப், அவரது சொந்த வலைதளம் மூலம், சமூகவலைதளத்திற்கானகட்டமைப்புக்குள் வரவிருக்கிறார். அது ஆட்டத்தையே மாற்றும் விதமாக இருக்கப்போகிறது" எனத் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் அதிபராக இருக்கும்போதேஅவருக்கும், ட்விட்டர் நிறுவனத்துக்கும்மோதல் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.