ADVERTISEMENT

பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் அழைப்பு...

09:58 PM Jun 02, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ஜி-7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியபோது இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


அடுத்த ஜி-7 நாடுகளின் உச்சிமாநாடு அமெரிக்காவில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வேண்டும், இந்திய-சீன எல்லை பிரச்சனை, உலக சுகாதார அமைப்பில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் குறித்து மோடி-டிரம்ப் பேசியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT