Skip to main content

''கரோனாவை தெரிந்தே பரப்பியிருந்தால்...'' -சீனாவை கடுமையாக எச்சரித்த டிரம்ப்

Published on 19/04/2020 | Edited on 19/04/2020

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,30,856 என்ற அளவிலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,60,754 என்ற அளவிலும் இருக்கிறது. கரோனா  வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக உலக அளவில் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றன. 

 

 Trump fiercely warned China


இந்நிலையில் நேற்று ஊடகத்தை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா தெரிந்தே கரோனா வைரஸை பரப்பிருந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். அதோடு மட்டுமல்லாமல் கரோனா வைரஸ் தொற்றால் சீனாவில் நிகழ்ந்த உயிரிழப்புகள் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அதிருப்தி தெரிவித்தார்.

கோவிட் -19 எனும் கரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு சீனாவில் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகள், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி மற்றும் இந்தியா போன்ற பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவிய நிலையில், உலகளவில் பல்வேறு நாடுகள் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

 Trump fiercely warned China

 

இந்த வைரஸ் ஆனது முதல் முறையாக வூஹான் நகரில் விலங்கு சந்தையிலிருந்து பரவியதாக கூறப்பட்டாலும், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நாளேடான தி வாஷிங்டன் போஸ்ட், தி பாக்ஸ் நியூஸ் சேனல்கள் இந்த சார்ஸ் கோவிட்-19 சீனாவில் வூஹான் நகரில் இருக்கும் அரசு ஆய்வகத்தில் இருந்து பரவியுள்ளது என செய்திகளை வெளியிட்டன. இந்த செய்திகளின் அடிப்படையில் அதிபர் டிரம்ப் சில அதிருப்திகளை சீனாவிற்கு தெரிவித்துள்ளார்.

 

b



கரோனா வைரஸ் தொற்று சம்பந்தமாக எந்த கேள்விகளைக் கேட்டாலும் எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை, எந்த தகவலையும் வழங்கவில்லை. ஒருவேளை சீனாவே இந்த வைரஸை பரப்பியது என்று கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். சீனா மீது நீங்கள் கோபமாக இருக்கிறீர்களா என்று கேட்டால் என்னுடைய பதில் ஆமாம் என்று தான் இருக்கும். தெரியாமல் செய்யும் தவறுக்கும், மனித சக்தியை மீறி தவறு நடப்பதற்கும், வேண்டுமென்றே ஒரு தவறை செய்வதற்கும் வேறுபாடுகள் நிறைய இருக்கிறது.

 

 Trump fiercely warned China


அமெரிக்காவில் உயிரிழப்பு அதிகம் என இருக்கும் நிலையில் நிச்சயமாக நாங்கள் முதலிடத்தில் இருக்க முடியாது. சீனா தான் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருக்கும். ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கைகளை சீன அரசு திருத்தி வெளியிடுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளும்போது உண்மையான உயிரிழப்பு சீனாவில் தான் அதிகம் இருக்கும் என்று அதிபர் தெரிவித்தார்.

 

 Trump fiercely warned China


இது இப்படி இருக்க, கரோனா வைரஸ் தொற்று முதலில் பரவிய நாடான சீனாவே தற்போது அந்த கரோனாவை பரிசோதிப்பதற்காக ரேபிட் கிட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை பல்வேறு நாடுகளுக்கு வழங்கிவருகிறது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் சீனா அனுப்பிவைத்துள்ள பரிசோதனை கருவிகள் சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பரிசோதனை உபகரணங்களை அதற்கான வழிகாட்டுதல் முறையில் பயன்படுத்தாமல் போவதே காரணம் எனவும் சீனா தெரிவித்துள்ளது.  அதேபோல் இனி அனுப்பப்படும் சோதனை கருவிகள் தரக்கட்டுப்பாடு ஆய்வுகள் இன்னும் முறையாக செய்து அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கார்கே இது போன்ற விஷயங்களில் பொறுப்புடன் பேச வேண்டும்” - மத்திய அமைச்சர் விமர்சனம்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 Union Minister pralhad joshi says Kharge should speak responsibly on such matters

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கோருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள், ஊர்கள், மலைகள் என 30 இடங்களுக்கு சீன பெயர்களை, சீன அரசு சூட்டி 4 ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி சீன குடிமை விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. 

அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தின் திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு ஏரி என 30 இடங்களுக்கு சீன எழுத்துகளிலும், திபெத்திய மொழிகளிலும் பெயர் சூட்டப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலம், சித்தோர்கார் என்ற இடத்தில் கடந்த 4ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “பிரதமர் மோடி நாட்டை பற்றி சிந்திப்பதே இல்லை. சோனியா காந்தியின் குடும்பத்தை வசைபாடுவதிலே முழு கவனத்தை செலுத்தி வருகிறார். மோடி தன்னை ‘56’ அளவு மார்பு கொண்டவன், பயப்பட மாட்டேன் என்று கூறுகிறார். நீங்கள் பயப்படாவிட்டால், சீனாவுக்கு பெரும் நிலப்பரப்பை கொடுத்தது ஏன்?. சீன ராணுவம் இந்தியாவிற்குள் ஊடுருவிய போது பிரதமர் மோடி தூங்கிக் கொண்டிருந்தாரா? அல்லது அவர் தூக்க மாத்திரை போட்டிருந்தாரா?” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று (05-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைப் பற்றி நான் இத்தகைய மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை. மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் பிரபலமான பிரதமராக இருப்பதால், கார்கே எந்த வகையான மொழியைப் பயன்படுத்துகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கார்கே, மாபெரும் கட்சியின் தேசியத் தலைவர். 

இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அவர் இது போன்ற விஷயங்களில் பேசும்போது பொறுப்புடன் பேச வேண்டும். தான் என்ன பேசுகிறோம் என்று அவருக்கு தெரியவில்லை. சீனாவின் ஊடுருவல்களை நாங்கள் தடுத்துள்ளோம். 1962ஆம் ஆண்டில், 34,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா கைப்பற்றியபோது அதை ஏன் காங்கிரஸ் தடுக்கவில்லை?. சீனாவை இந்திய எல்லைக்குள் நுழைய எங்கள் அரசு அனுமதிக்கவில்லை என்று முழு நம்பிக்கையுடன் கூறுகிறோம். ஒரு அங்குல நிலம் கூட யாராலும் அபகரிக்கப்படவில்லை” என்று கூறினார்.

Next Story

“பிரதமர் மோடி சீன எல்லை பிரச்சனை குறித்து எப்போது வாய்திறப்பார்?” - கனிமொழி எம்.பி. கேள்வி

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
"When will PM Modi open his mouth on China border issue?" - Kanimozhi MP question

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கோருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள், ஊர்கள், மலைகள் என 30 இடங்களுக்கு சீன பெயர்களை, சீன அரசு சூட்டி 4 ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி சீன குடிமை விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தின் திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு ஏரி என 30 இடங்களுக்கு சீன எழுத்துகளிலும், திபெத்திய மொழிகளிலும் பெயர் சூட்டப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

"When will PM Modi open his mouth on China border issue?" - Kanimozhi MP question

இந்நிலையில் இது குறித்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும்,  திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றும் அளவிற்கு நம் நாட்டிற்குள் சீனாவை ஊடுருவ, ஒன்றிய பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. தங்களின் ஆதாயத்திற்காக, நாட்டின் பாதுகாப்பை அடைமானம் வைத்துவிட்டதா பா.ஜ.க.?. தமிழ்நாட்டில் வாக்குக்காக அவதூறுகளைப் பரப்பும் பிரதமர் மோடி, சீன எல்லை பிரச்சனை குறித்து எப்போது வாய்திறப்பார்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.