trump

அமெரிக்காவில் கடந்த வருடம் நடந்த அதிபர் தேர்தலில், ஜோ பைடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர், ஜனவரி20 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

Advertisment

இதற்கிடையே அமெரிக்க அதிபராக பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு,ஒப்புதல் அளிக்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடியபோது, நாடாளுமன்றத்தில் நுழைந்தடொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்கப் போலீஸ் துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

Advertisment

இந்நிலையில் நாடாளுமன்றகட்டடத்திற்குள் நடந்த வன்முறையைத் தூண்டிவிட்டதாக ட்ரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானம் நிறைவேறினால் ட்ரம்ப், இனி அதிபர் தேர்தலில்போட்டியிட முடியாதநிலை ஏற்படும் என்ற நிலையில், இந்தத் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில்நிறைவேறியது.

அதனையடுத்து ட்ரம்ப்மீதான கண்டனதீர்மானம், செனட்சபையில்கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில்தீர்மானத்திற்கு ஆதரவாக57பேரும், எதிராக43 பேரும்வாக்களித்தனர். ட்ரம்பிற்கு எதிராகவாக்களித்தஏழு பேர் ட்ரம்பின் கட்சியைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் தீர்மானம் நிறைவேற தேவையான மூன்றில்இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காததால், கண்டனதீர்மானத்திலிருந்து ட்ரம்ப்தப்பினார்.

Advertisment

100 பேர்கொண்ட செனட்சபையில்மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற 67 வாக்குகள் வேண்டும் என்பதுகுறிப்பிடத்தக்கது.