அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் இன்று பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒபாமாவுக்கு நோபல்பரிசு தரப்பட்டது குறித்து விமர்சித்தார்.
அப்போது பேசிய அவர், "நியாயமாக பார்த்தால் எனக்குதான் நிறைய விஷயங்களுக்கு நோபல் பரிசு அளித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. ஒபாமா பதவிக்கு வந்த சில ஆண்டுகளிலேயே அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கினார்கள். உண்மையில் எதற்காக தனக்கு அந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது என்று ஒபாமாவுக்கே தெரியாது. அதேபோலத்தான் எனக்கு அது தெரியாது" என கூறினார்.