Skip to main content

மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற நண்பனை அடித்து கொன்ற கணவன் !

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

 

திருச்சி சமயபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் ஆனந்த்.  இவரது மனைவி தேன்மொழி மற்றும் குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர்  ரவுடி பட்டியலில் இருக்கும் திருமணமானவர். ஆனந்த், விஜய் இருவரும் தற்போது பாதாள சாக்கடை திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர்.

l

இருவரும் நண்பர்கள் என்பதால் ஆனந்த் விஜய் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவாராம். 'அப்போது விஜயின் மனைவி மீது ஆனந்துக்கு ஆசை ஏற்பட்டது. எப்படியாவது அவளை அடைய வேண்டும் என எண்ணி அவரிடம் பலமுறை பேச்சுக் கொடுத்துள்ளார். ஆனந்தின் எண்ணத்தை அறிந்து கொண்ட விஜய் மனைவி அவரிடம் சரியாக பேசுவதில்லை. ஆனாலும் அவரை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார். ஒரு நாள் மாலை நேரம் வேலை முடிந்து வந்த விஜய்யும், ஆனந்தும் மது அருந்தியிருக்கிறார்கள். 

 

பின்னர் விஜய் வீட்டுக்கு வராமல் வெளியே சென்றுவிட்டார். இதை அறிந்த ஆனந்த் இதுதான் சரியான நேரம் என்று நினைத்து இரவு 11 மணிக்கு விஜய் இல்லாத நேரம் பார்த்து வீட்டுக்குள் போய் இருக்கிறான். அப்போது விஜய்யின் மனைவி கணவர் இல்லை என்று சொல்லி இருக்கிறார். இருப்பினும் ஆனந்த் வீட்டுக்குள் புகுந்து மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்திருக்கிறார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டனர். இந்த களேபரத்தில் ஆனந்த அதற்குள் தப்பி ஓடி விட்டார். நள்ளிரவு 12 மணியளவில் விஜய் வீட்டுக்கு வந்தபோது அவரது மனைவி,  ஆனந்த் அத்துமீறி நடந்ததையும் அக்கம் பகக்கத்தில் உள்ளவர்கள் காப்பாற்றியதையும் சொல்லி அழுதுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த விஜய், ஆனந்தை தேடி அந்த நள்ளிரவில்  அலைந்திருக்கிறார் . கடைசியாக அதிகாலை 4 மணியளவில் சமயபுரம் நால் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு படுத்திருந்த ஆனந்தை பார்த்ததும் ஆத்திரத்தில் அருகே இருந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து தலையில் போட்டுள்ளார். இதில் மண்டை உடைந்தது. அதன் பிறகும் ஆத்திரம் அடங்காத விஜய் மீண்டும் அதே பாரங்கல்லை எடுத்து போட, இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஆனந்த ஆனால் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

 

தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று ஆனந்த் உடலை கைப்பற்றி அரசு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனந்தை கொன்ற விஜய் தானாக சமயபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்து என் மனைவியை பாலத்காரம் செய்ய முயன்றதை கேள்விப்பட்டு ஆத்திரத்தில் கொன்று விட்டேன் என்று சொல்ல அதிர்ச்சியடைந்த போலிஸ் விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.