Skip to main content

டிக் டாக் நிறுவனத்திற்கு 1 வாரத்தில் 40 மில்லியன் டாலர்கள் நஷ்டம்...

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

"டிக் டாக்" மொபைல் செயலியால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் உட்பட அனனைவரது மத்தியிலும், சமூகத்திலும் மிகப்பெரிய சீர்கேட்டை உருவாக்குகிறது என கூறி மதுரை உயர்நீதிமன்ற கிளை மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

 

tik tok faces loss of 5 lakh dollar per day after it banned in india

 

 

இந்த வழக்கை விசாரித்த அமர்வு உடனடியாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து "TIK TOK" மொபைல் செயலியை நீக்க உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. உலகம் முழுவதும் 100 கோடி பேர் பயன்படுத்தும் இந்த செயலியை இந்தியாவில் மட்டும் 30 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் இந்த செயலி தடை செய்யப்பட்டதால் ஒரு நாளைக்கு சுமார் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் நஷ்டமாவதாக தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அந்நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கெட்டவர்களை மட்டும் காயப்படுத்துவேன்' - கொலை செய்துவிட்டு பதிவு போட்ட டிக்டாக் பிரபலம்

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

'I only hurt the bad guys' - Tik Tok celebrity who recorded after killing

 

பெங்களூரில் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் சிஇஓ ஆகிய இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலைக்கு காரணமாக இருந்த இன்ஸ்டா, டிக்டாக்  பிரபலம் போட்ட பதிவு வைரலாகி வருகிறது.

 

பெங்களூரின் வடகிழக்கு தியான பம்பை எக்ஸ்டென்ஷனில் 'ஏரோனிக்ஸ் இன்டர்நெட் பிரைவேட் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணீந்திர சுப்ரமண்யா என்பவரும் சிஇஓவாக வினு குமார் என்பவரும் இருந்தனர். இவர்கள் இருவரையும் மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினர். இதில் அலுவலக வளாகத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

 

'I only hurt the bad guys' - Tik Tok celebrity who recorded after killing

 

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் அதே நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்த பெலிக்ஸ் என்ற முன்னாள் ஊழியர் இந்த கொலையில் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. டிக்டாக் பிரபலமான பெலிக்ஸ் சில மாதங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறி புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். தனது நிறுவனத்திற்கு ஏற்படும் போட்டியை தடுக்கவே இருவரையும் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இந்த கொலையில் ஈடுபட்ட பெலிக்ஸ் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

கொலை நிகழ்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பெலிக்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இந்த கிரக மக்கள் எப்போதும் ஏமாற்றுக்காரர்கள். அதனால் இந்த கிரக மக்களை காயப்படுத்துவேன். கெட்டவர்களை மட்டுமே காயப்படுத்துவேன். எந்த நல்ல மனிதர்களையும் காயப்படுத்தமாட்டேன்' எனப் பதிவிட்டுள்ளார். இதை வைத்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Next Story

மீசை வினித் மீண்டும் கைது

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

Mustache vinith again arrested

 

கேரளாவில் டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர் மீசை வினித். இவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்திருந்த நிலையில், தற்போது வழிப்பறி சம்பவத்தில் மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கடந்த மாதம் 23 ஆம் தேதி பெட்ரோல் பங்கின் மேலாளர் ஒருவர் வங்கியில் பணம் செலுத்துவதற்காக 2.5 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து பிடித்து மிரட்டி 2.5 லட்சம் ரூபாய் பறித்துச் சென்றனர்.

 

இதுகுறித்து அந்த பெட்ரோல் பங்க் மேலாளர் காவல்துறையில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருவனந்தபுரம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட மீசை வினித் மற்றும் அவனது கூட்டாளி ஜீத்து ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தைக் கொண்டு பெட்ரோல் பங்க் மேலாளரை துரத்தி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.