பிரேசில் நாட்டில் லவோ நகரில் உள்ள மருந்துக்கடை ஒன்றில், திடீரென்று புகுந்த இரண்டு திருடர்கள் கடை உரிமையாளரை தாக்கி துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது அந்த கடையின் உள்ளே மருந்து வாங்க வந்த பெண் ஒருவர், கொள்ளை சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியோடு நின்றிருந்தார். இதனால் கவனித்த அந்த திருடன் அந்த பெண்ணின் நெற்றியில் முத்தமிட்டு அவரை சமாதானப்படுத்தினான்.
https://www.youtube.com/watch?time_continue=30&v=BnUBJ_crj3s
பின்பு திருட வந்த இருவரும் அந்த மருந்துகடையிலிருந்த 19 ஆயிரம் மற்றும் சில மருந்து பொருட்களையும் அங்கிருந்து கொள்ளையடித்து கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.