Skip to main content

குகையில் சிக்கிய தாய்லாந்து சிறுவர்கள்! காத்திருக்கும் பிறந்தநாள் கேக்!

Published on 05/07/2018 | Edited on 05/07/2018

கரைபுரண்டோடும் வெள்ளத்தின் நடுவே குகையில் சிக்கியிருக்கும், தாய்லாந்தைச் சேர்ந்த பள்ளிச்சிறுவர்கள் 12 பேரை எப்படி மீட்கப்போகிறார்கள் என உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
 

thai

 

 

 

தாய்லாந்தைச் சேர்ந்த இளம் சாக்கர் வீரர்கள் 12 பேர், தங்கள் பயிற்சியாளர் ஒருவருடன் பயிற்சிக்குப் பின்பு ஜாலியாக நேரம் செலவிடுவதற்கு வந்த இடத்தில்தான் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டுள்ளனர். வெள்ளத்திலிருந்து தப்பிக்க ஒரு குகையில் அடைக்கலம் புகுந்திருக்கும் இவர்கள் ஒரு வார காலத்துக்கும் மேலே என்ன ஆனார்கள் என்றே தகவல் தெரியாமலிருந்தது.
தாய் கடற்படை வீரர்களும் பிரிட்டிஷ் நேவி எக்ஸ்பர்ட்டுகளும்தான் அவர்கள் உயிரோடு இருப்பதை உறுதிசெய்து பேஸ்புக்கில் புகைப்படம் வெளியிட்டனர். இதையடுத்து சியாங் ராய் மாகாணத்தின் தாம் லுவாங் குகையிலிருந்து அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.
 

தொடர்ந்து பெருகிவரும் வெள்ளத்தால் அவர்களை அங்கிருந்து மீட்பதில் தாமதம் ஏற்பட்டுவருகிறது. அதனால் குகைக்குள் செல்லும் நீரின் அளவைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 120 மில்லியன் லிட்டர் குகையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறது. குகையின்  வாசலிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அவர்களை மீட்பு படையினர் மூலம் குகை வாசலுக்குக் கொண்டுவருவது, அல்லது குகையை துளையிட்டு அதன் மூலம் மீட்பது என இரு மீட்பு முறைகள் பரிசீலிக்கப்படுகின்றன.
 

thai

 

 

 

இரு முறைகளிலுமே ஆபத்துகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் சிறுவர்களுக்கு டைவிங் மற்றும் ஸ்விம்மிங் பயிற்சியளிக்கப்படுகிறது. வெள்ளத்தின் வேகம் குறையும்பட்சத்தில், அவர்களை மீட்பது சுலபமாகும் என மீட்புக் குழு எதிர்பார்க்கிறது.

சிறுவர்களுக்கு குளிரைத் தாங்கிக்கொள்ள அவசரகால பாயில் பிளாங்கட், வெளிச்சத்துக்காக டார்ச் அளிக்கப்பட்டிருக்கிறது. மீட்புப்பணியில் ஆஸ்திரேலியன் பெடரல் போலீஸ், அமெரிக்க ராணுவம், பிரிட்டிஷ் குகை நிபுணர்கள், சீனா, ஜப்பான், மியான்மர் என பன்னாட்டு நிபுணர் பட்டாளமே ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
 

குகையில் சிக்கிக்கொண்ட சிறுவர்களில் ஒருவன் நைட். நைட்டின் குடும்பம், அவன் பயிற்சிக்குச் சென்ற இரவு அவனது பெர்த்டே கேக்குடனும், விருந்து தயாரிப்புகளுடனும் பிறந்தநாளைக் கொண்டாடக் காத்திருந்தது. ஆனால் அவனோ கொஞ்சம் சிற்றுண்டிகளுடன் குகையில்போய் மாட்டிக்கொண்டான். நைட் கொண்டுசென்ற சிற்றுண்டிதான், ஒரு வார காலத்துக்கும் மேலான குகைவாசத்தில் அவர்களது பசிக்கு ஆதாரமாக இருந்திருக்கிறது என்கிறார்கள்.
 

 

 

நைட்டின் சகோதரியான புன்பஸ்தா, அந்த கேக்கை பத்திரமாக ஃபரிட்ஜில் பத்திரப்படுத்தியிருக்கிறாராம். அவன் திரும்பிவந்ததும் அவனுக்கு அந்த கேக்கைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தி தாமதனாலும் அவன் பிறந்தநாளைக் கொண்டாடக் காத்திருக்கிறாள். 
 

தாய்லாந்தின் லட்சோப லட்சம் உள்ளங்களுடன், ஒரு கேக்கும் காத்திருக்கிறது சிறுவர்களின் வருகைக்காக.. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்குவாரியில் விழுந்த தொழிலாளி சடலமாக மீட்பு

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
A worker who went to bathe in Calquary died

கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அடுத்த பொன்னாச்சி பகுதியைச் சேர்ந்தவர் புட்டப்பா (50). இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பெஜிலட்டி பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் கல் சைனிங் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பருடன் அதேப்பகுதியில் உள்ள மற்றொரு கல்குவாரியில் குளிக்க சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி நீரில் மூழ்கினார். இது பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் உடனடியாக இது குறித்து கல்குவாரியில் உள்ள மேலாளர் இடம் தகவல் தெரிவித்தார். பர்கூர் போலீசாரும், அந்தியூர் தீயணைப்பு  வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் புட்டப்பாவை தேடினர். இரவு நேரம் என்பதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

நேற்று 2 -வது நாளாக தேடும் பணி நடந்தது. அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மாலை புட்டப்பா உடல் மீட்கப்பட்டது.இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

அரிவாளுடன் கோவில் கருவறைக்குள் புகுந்த இளைஞர்; விசாரணையில் அதிர்ச்சி

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
The youth entered the sanctum sanctorum of the temple with a sickle; Shocked at the trial

அரிவாளுடன் இளைஞர் ஒருவர் கோவில் கருவறைக்குள் நுழைந்து கொண்டு வெளியே வராமல் போக்கு காட்டிய சம்பவம் புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே ஆஞ்சநேயர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த பகுதியில் மிகவும் பிரபல கோவிலாக இருப்பதால் அதிகப்படியான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திடீரென இளைஞர் ஒருவர் கோவிலின் கருவறைக்குள் அரிவாளுடன் சென்றுள்ளார். பொதுமக்கள் வெளியே வர சொல்லியும் அந்த இளைஞர் கருவறையை விட்டு வெளியே வரவில்லை.

இதனால் பக்தர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கோவிலுக்கு வந்த போலீசார், அந்த இளைஞரை வெளியே கொண்டு வர முயற்சித்தும் அந்த இளைஞர் வர மறுத்தார். மேலும் கையில் இருந்த அரிவாளை காட்டி போலீசாருக்கு மிரட்டல் விடுத்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினரின் உதவி நாடப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் அவர் மீது தண்ணீரை பீச்சி அடித்து அவரை வெளியே கொண்டுவர முயற்சி செய்தனர்.

The youth entered the sanctum sanctorum of the temple with a sickle; Shocked at the trial

பின்னர் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி அந்த இளைஞர் வெளியே கொண்டுவரப்பட்டார். நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இளைஞர் புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியை சேர்ந்த வினோத் என்பதும், காதல் விவகாரத்தால் ஆஞ்சநேயர் கோவிலின் கருவறைக்குள் சென்றதும் தெரியவந்தது. தொடர் முயற்சிகளுக்குப் பிறகு கைகளை துணியால் கட்டி வெளியே கொண்டு வரப்பட்ட அந்த இளைஞர் ஆட்டோவில் ஏற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.