Skip to main content

உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய்...

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை நாய் ஒன்று காப்பாற்றிய சம்பவம் தாய்லாந்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

thailand dog rescues a burried child alive

 

 

தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பாங்காக் பகுதியில் காலை நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிங்பாங் என்ற அந்த நாய் அதிகாலையில் தனது எஜமானருடன் விவசாய பணி நடக்கும் வயல்வெளிக்கு சென்றுள்ளது. அங்கு திடீரென எதையோ மோப்பம் பிடிக்க தொடங்கிய பிங்பாங், ஒரு இடத்தில் வேகமாக மண்ணை தோண்ட ஆரம்பித்துள்ளது.

இதன் நடவடிக்கைகளை பார்த்த அங்கிருந்த விவசாயிகள் அந்த இடத்திற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது ஒரு குழந்தையின் கால் மட்டும் மண்ணில் தெரிந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் விரைவாக அந்த இடத்தை தோண்டிய போது பிறந்து சில தினங்களே ஆன குழந்தை ஒன்று புதைக்கப்பட்டிருந்தது. அந்த குழந்தைக்கு உயிர் இருப்பதை அறிந்த விவசாயிகள் அதனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அந்த குழந்தை அதே பகுதியை சேர்ந்த 15 வயது பெண் ஒருவருடையது என்றும், விடுதியில் தங்கியிருந்த அந்த பெண் கற்பமானதை வீட்டில் மறைப்பதற்காக குழந்தை பிறக்கும் வரை விடுதியில் இருந்துள்ளார். குழந்தை பிறந்தவுடன் தனது ஊருக்கு அருகில் உள்ள இந்த கிராமத்தில் நள்ளிரவு நேரத்தில் புதைத்த விட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அந்த 15 வயது பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து ஒன்றில் தனது ஒரு காலை இழந்த பிங்பாங் குழந்தையை காப்பாற்றிய சம்பவம் அந்த ஊரில் பிரபலமாகி வருகிறது. பிங்பாங்கின் செயலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தாய்லாந்தில் சிக்கியிருக்கும் மற்ற தமிழர்களையும் மீட்கும் பொறுப்பை அரசு  ஏற்கும்” - அமைச்சர் மஸ்தான் 

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

"Government will accept the responsibility of rescuing other Tamils ​​trapped in Thailand" - Minister Mastan

 

தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 300க்கும் மேற்பட்டோர் தாய்லாந்து நாட்டில் பணி செய்ய சென்றனர். அங்கிருந்து அவர்கள் முறைகேடாக மியான்மர் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சட்டவிரோத பணிகளை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். மேலும், பணி செய்ய மறுத்தால் அந்த கடத்தல் கும்பல் இவர்களை கடுமையாக தாக்கியுள்ளது. இந்த விவகாரம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் இருந்து சென்ற 300 நபர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 13 பேர் இருந்தனர். 

 

தமிழர்கள் மியான்மரில் சிக்கி தவிக்கும் விவகாரத்தை அறிந்ததும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு தமிழர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் எழுதினார். இந்நிலையில் இந்திய அரசின் வெளியுறவுத் துறைக்கு தமிழ்நாடு அரசு தொடர்பில் உள்ள 20 தமிழர்களை மீட்டு வருவதற்கான உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளை எடுத்த பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தாயகம் திரும்ப அதற்கான டிக்கெட் உள்ளிட்ட செலவை அரசே ஏற்கும் என்றும் தமிழ்நாடு அரசு மத்திய அரசிற்கு தகவல் தெரிவித்தது. 

 

இந்நிலையில் மியான்மரில் சிக்கி தவித்திருந்த 13 தமிழர்கள்,  நேற்று தாயகம் திரும்புகின்றனர். 13 தமிழர்களும் ஹாங்காங்-லிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு திரும்பினர். அவர்கள் நேற்று இரவு சென்னை வந்தடைந்தனர்.  அவர்களை வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சென்னை விமான நிலையத்தில் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், “தாய்லாந்து நாட்டில் வேலை என கூறி பல்வேறு ஏஜண்ட்கள் மூலம் அங்கு சென்ற தமிழர்கள் பலர் தாய்லாந்தின் பக்கத்து நாடான மியான்மரில், சொன்ன வேலையை தவிர்த்து வேறு வேலைகள் வழங்கியுள்ளனர். அதனை இவர்கள் செய்ய மறுத்தபோது பல்வேறு இன்னல்களை சந்தித்து, அங்கு சிக்கி தவித்துள்ளனர். 

 

இந்தத் தகவலை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தத் தகவலை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு தெரிவித்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதன்மூலம், இந்த 13 நபர்களும் தமிழ்நாட்டுக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் தாய்லாந்திலிருந்து தமிழ்நாடு வருவதற்கான அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு அரசு ஏற்றுகொண்டது. இன்னும் பல பேர் அங்கு இருப்பதாக செய்திகள் வருகின்றன. அவர்களையும் அழைத்து வரும் பொறுப்பை அரசு ஏற்கும் என்பதை தெரிவித்துகொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 


 

Next Story

“மியான்மரில் சிக்கியவர்கள் நிச்சயம் மீட்கப்படுவர்” - தமிழிசை சௌந்தர்ராஜன்

Published on 19/09/2022 | Edited on 19/09/2022

 

"Those trapped in Thailand will surely be rescued" - Tamilisai Soundarrajan

 

தாய்லாந்து நாட்டில் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள் ஏமாற்றப்பட்டு நாடு திரும்ப முடியாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக தவித்து வருகின்றனர். 

 

ஐடி நிறுவனங்களில் பணி எனக் கூறி இடைத் தரகர்களிடம் பணம் செலுத்திய தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த சிலர் கடந்த மே மாதம் தாய்லாந்து நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு டேட்டா பதிவிற்கான பணிக்காக அழைத்து செல்லப்பட்ட அவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி மியான்மருக்கு மர்ம நபர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மோசடி தொழில் செய்ய வற்புறுத்துவதாகவும் சம்மதிக்கவில்லை எனில் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். 

 

இதனை அடுத்து மியான்மரில் சிக்கிய இந்தியர்கள் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் எங்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் “நிச்சயமாக அவர்கள் மீட்டெடுக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் மிக பாதுகாப்பாக மீட்கப்பட்டு அவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருக்க என்ன வழிமுறைகள் தேவையோ அனைத்தும் மேற்கொள்ளப்படும். மிக விரைவில் அவர்களை இந்தியாவிற்கு வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளியுறவுத்துறை அமைச்சகத்தை நிச்சயமாக தொடர்பு கொண்டு இந்த காட்சிகளை வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.