thailand

தாய்லாந்து நாட்டில் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடுவது வழக்கம். தாய்லாந்தைச் சேர்ந்தவர் பணுதாயென்பவர் தன்னுடைய மனைவியுடன் விவாகரத்து பெற்று தனது 5 வயது மகனுடன் வாழ்ந்த்து வருகிறார்.

Advertisment

பணுதாய் மகன் படித்து வரும் பள்ளியில் அன்னையர் தினம் அன்று குழந்தைகளை அழைத்து நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் தாயார் அனைவரும் கலந்துகொண்டிருப்பதை பார்த்து தன்னுடைய மகனுக்கு தாயை பிரிந்திருகிறோம் என்கிற ஏக்கம் வந்துவிட கூடாது என்பதற்காக பணுதாய் பெண்ணை போன்று உடை அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தந்தையின் பாசத்தை வெளிபடுத்தியுள்ளார். இந்த தருணம் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளத்தில் தந்தையின் பாசத்தை வெளிகாட்ட பரவலாக பரவி வருகிறது.