Skip to main content

60 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் செல்லும் கார்... அசந்து தூங்கிய டிரைவர்... வைரலாகும் வீடியோ...

Published on 11/09/2019 | Edited on 11/09/2019

அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் தானியங்கி காரான டெஸ்லாவில் பயணம் செய்துகொண்டிருக்கும் போது தூங்கிக்கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

tesla autopilot car driver sleeps while driving

 

 

எலக்ட்ரிக் கார் தயாரிப்பதில் சிறந்து விளங்கும் நிறுவனமான டெஸ்லா, தனது வாகனங்களில் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கு பெயர் போனது. அந்த வகையில் அந்த நிறுவனத்தின் புதிய அறிமுகம், தானியங்கி கார்கள். டெஸ்லாவின் இந்த தானியங்கி காரில் 50 முதல் 60கிமீ வேகத்தில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் இருக்கையில் இருப்பவரும், அருகில் இருப்பவரும் அசந்து தூங்கிக்கொண்டு சென்றுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள டெஸ்லா நிறுவனம், ''டெஸ்லா கார் தானியங்கி வகை. தானாகவே இயக்கும் திறன் கொண்டது. ஆனாலும் ஓட்டுநர்கள் முழு கவனமுடன் இருக்க வேண்டும். தானியங்கி என்பதால் அசந்து தூங்கும் அளவுக்கு காரை பாதுகாப்பாக நினைக்கக்கூடாது'' என டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு; மதுரையில் பரபரப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiffin box range Sensation in Madurai

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது நேற்று இரவு (20.04.2024)  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.

மேலும் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கீழவளவு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

Next Story

காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
madurai thirumangalam nearest two wheeler car incident

மதுரையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை என்ற பகுதியில்  திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் மதுரையில் உள்ள வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு ஆன்மிகப் பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் திருமங்கலம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.