/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hgf_1.jpg)
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது பதவியில் 16 வயது சிறுமியான ஆவா முர்டோ என்பவரை அமரவைத்தார்.
பின்லாந்து நாட்டின் பிரதமராக பதவிவகித்து வருபவர் சன்னா மரின். உலகின் மிக இளம்வயது பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர், அந்நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது பதவியில் 16 வயது சிறுமியான ஆவா முர்டோ என்பவரை ஒருநாள் பணியாற்றவைத்தார். ஆவா முர்டோவுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்படாதபோதும், அவர் அந்த ஒரு நாளில் தொழில்நுட்பத்துறையில் பெண்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு அரசியல்வாதிகளை சந்தித்தார்.
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பிளான் இன்டர்நேஷனல் அமைப்பு பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ், உலகம் முழுவதும் ஒரு நாள் அரசியல் மற்றும் பிற துறைகளின் தலைமைப்பதவிக்கு பெண் குழந்தைகள் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆவா முர்டோ பின்லாந்து நாட்டின் ஒருநாள் பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)