Skip to main content

பெண்ணின் வயிற்றில் இருந்த 1968 கற்கள்... அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

போலந்து நாட்டின் சாங்கோ மாகாணத்தில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலி மற்றும் மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவர் வயிறு மற்றும் குடல் பகுதிகளை ஸ்கேன் செய்து பார்த்தபோது மருத்துவர்கள்க்கு அதிர்ச்சி காத்திருந்தது.
 

z



அவரது வயிற்றில் 1898 கற்கள் குடல் மற்றும் வயிற்றை அடைத்துக்கொண்டு இருந்துள்ளது. அவற்றை அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்த கற்கள் எப்படி அவர் வயிற்றினுள் சென்றன என்பது குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை. அவரே சாப்பிட்டாரா என்பது மயக்கம் தெளிந்து அவரிடம் விசாரணை நடத்தினால்தான் தெரியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடிக்கடி வயிற்று வலி; விபரீத முடிவை எடுத்த இளைஞர்

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

young man lost their life due to frequent stomach pain

 

ஈரோடு, வீரப்பன் சத்திரம், சுந்தர் வீதியைச் சேர்ந்தவர் அம்சவேல் (47). இவரது மகன் பரமசிவம் (21). எலக்ட்ரீஷியன். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது.

 

இந்த நிலையில் சம்பவத்தன்று ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள சுள்ளிக்காடு எனும் பகுதிக்குச் சென்ற பரமசிவம் வயிற்று வலி காரணமாக விஷம் அருந்தி விட்டதாகத் தனது தந்தைக்கு ஃபோன் மூலமாகத் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாகத் தந்தை அம்சவேல் அங்கு சென்று அவரை மீட்டு, அருகில் உள்ள அரச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். 

 

அங்கு முதலுதவி பெற்ற பின் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பரமசிவம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், சிவகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

Next Story

வயிற்று வலியால் விபரீத முடிவெடுத்த முதியவர்

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

erode gobichettipalayam old man stomach pain incident

 

வயிற்று வலியால் முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த உடையகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாட்டமூப்பன் (வயது 76). இவர் தனது மருமகள், பேரனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி மாலை வயிற்று வலி காரணமாக பாட்ட மூப்பன் தனது வீட்டில் இருந்த குருணை மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். மேலும் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 

அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பாட்டமூப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.