இலங்கை ராணுவத் தளபதி அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தற்போதைய இலங்கை ராணுவத் தளபதியான ஷாவேந்திர சில்வா மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. போர் நடந்த காலத்தில் இலங்கை ராணுவத்தின் 58-வது பிரிவுக்கு தலைமை வகித்த அவர் தமிழர்களுக்கான அடிப்படை வசதிகளை தடுத்து நிறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை உள்நாட்டு போரின் போது, செய்த குற்றங்களுக்காக சில்வாவுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.