இந்திய மீனவர்கள் 4 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை இன்று கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் 4 பெரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை காங்கேசன் முகாமுக்கு அழைத்து சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மீனவர்களை கைது செய்தது மட்டுமின்றி அவர்களது படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
Advertisment