இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ராஜபக்சே காட்சியை சேர்ந்ததினேஷ் குணவர்தனே பொறுப்பேற்றுள்ளார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்சியின் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இன்று அவர் பதவியேற்றார்.

kk

Advertisment

சமீபத்தில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா, அதிபர் சிறிசேனாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி ராஜபக்சே நியமனம் சட்டவிரோதம் என்பதை ஏற்கிறேன் எனவும். பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது. அதுவரை ரணில் விக்ரமசிங்கேதான் பிரதமர் எனவும் தெரிவித்திருந்தார். அதேபோல் கடந்த 28-ஆம் தேதி அன்று இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.