Skip to main content

இலங்கை குண்டுவெடிப்பு நட்சத்திர ஹோட்டலில் நடந்து செல்லும் தீவிரவாதி வீடியோ வெளியானது!

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று அடுத்தடுத்த 8 இடங்களில் குண்டுகள் வெடித்தது. இதில் உள்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இலங்கையின் தலைநகரான கொழும்புவில் சர்வதேச அளவில்  "ஷாங்ரிலா ஹோட்டல் " என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல்  செயல்பட்டு வருகிறது.  இந்த ஹோட்டலுக்கு வெளிநாட்டினர் மற்றும் சர்வதேச நாடுகளின் முக்கிய தலைவர்கள் உட்பட பலர் அதிக அளவில் வந்து செல்கின்றனர். 
 

video



அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை  அவர்களை குறி வைத்து அந்த ஹோட்டலில் தீவிரவாதிகளால் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்தது.  இந்த நிலையில் ஹோட்டலில் தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ இலங்கை உள்ளூர் சேனல்களில் வெளியாகியுள்ளது. இதனை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சரியாக ஒரு நிமிடம் ஐந்து விநாடிகள் காட்சிகள் அமைந்துள்ளனர். அந்த நட்சத்திர ஹோட்டலில் தலையில் ஊதா நிறத் தொப்பியுடன் ஒருவர் சந்தேகப்படும் படி நடந்து செல்கிறார். அவர் தான் தற்கொலைப்படை தீவிரவாதியாக இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் புனித செபாஸ்டியன் சர்ச்சில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளனர். 

 

video



நிகோம்போவில் நடந்த இந்த சம்பவத்தில் பேக் அணிந்த ஒருவர் சந்தேகப்படும் படியாக நடந்து சென்றார். இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடப்பதற்கு முன்பு இந்திய உளவுத்துறை மற்றும் தமிழக உளவுத்துறை இலங்கை அரசை எச்சரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய உளவுத்துறை அறிக்கையை இலங்கை அரசு அலட்சியமாக கருதியதால் தான் சுமார் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை மக்களிடம் அதிபர் மற்றும் இலங்கை அரசாங்கம் மன்னிப்பு கேட்டது. இதன் தொடர்ச்சியாக இலங்கை முப்படை தளபதிகள் தற்போது மாற்றப்பட்டுள்ளனர். மேலும் இந்த தொடர் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


பி.சந்தோஷ், சேலம்.

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.